Wednesday 19 November 2014

கோழிமழை






அவனுக்கு எல்லாமே
அவங்க அம்மாதான்.
மழை எப்படி பெய்கிறது
எனக் கேட்டால்
அம்மா தண்ணீர் தெளிப்பதாக சொல்கிறான்.

மழையில் நனைந்த கோழி
இறகை உலர்த்தியது.
அங்கப்பார் கோழிமழை
பெய்கிறது என்கிறான்.

எவ்வளவு தண்ணி பாரேன் என
சாலையில் ஓடிய தண்ணீரை காட்டினான்.
எட்டி பார்க்காத தண்ணி
ஆத்துக்கு இழுத்துட்டு போயிடும் என்றேன்.
ஆறு இதவிட பெருசா
என கேட்கிறான்.

தினமும் மழை பெய்தால்
எவ்வளவு நல்லா இருக்கும்,
ஏன் பெய்ய மாட்டேங்குது என கேட்கிறான்.
அவனுக்காகவாவது தினம் வந்துவிட்டு போ மழையே.

No comments:

Post a Comment