Wednesday 18 September 2013

கிராமத்து வாழ்க்கை!




வறுமையானது தான் என்றாலும்
  வசந்தமான வாழ்க்கை!
நடை பயண கஷ்டம் கூட,
    இளம் தென்றலால் இஷ்டமாகும்..
தாரிடப்படாத தாய் பூமியை,
    முத்தமிட்டுத் திளைக்கும் பாதங்கள்..
 கிராமத்துக் காதல்களின்,
    அரங்கேற்ற மேடைகளாய் வயல்வெளிகள்!
முதுமையின் கனிமையும்,
     இளமையின் இனிமையும்,
இணைந்து உறவாடும் இல்லறம்..
     மலருடன் விளையாடும் பூங்காற்று,
மண்மணம் மாறாத பெண்மை..!
     கூடி உண்ணும் சுவையில்
 குழந்தைகளின் சந்தோஷம்…!!
     பெரும் வளர்ச்சி கண்ட
 நகரங்களோடு ஒப்பிட்டாலும்..,
     பொய்யற்ற அன்பில், 
புகழாரம் சூடி நிற்கிறது..
     ”கிராமத்து வாழ்க்கை”!!!


No comments:

Post a Comment