Friday 6 September 2013

பஞ்சபூதங்கள் வழி காதல்




தொலைதூரம் உனைப்பிரிந்து,

இப்படி தொலைபேசியை துணைகொள்வதை  விட ,…..

தொட்டு பேசி ,

உனை  முட்டி விளையாடும் காற்றாய்;

ஒரு நிமிட வசிப்பாயினும்,

நீ கொப்பளித்து, உமிழும் நீராய்;

உன் விரலிடை சிம்மாசனத்தில் அமர்ந்த,

சிகரெட்டின் நெருப்பாய்;

நடந்தால்,  உனையும்,..

விழுந்தால், உன் நிழலையும்,..

மடியில் ஏந்தும் நிலமாய்;

உலகத்தின் ஓரத்தில் நின்று,

நீ நிமிர்ந்து பார்த்தாலும்,

உன் விழியை எட்டும் ஆகாயமாய்;

உருமாற ஆசை……

உயிரற்று இருந்தாலும் கூட,

என் உயிரே!

உன் உடன் இருப்பேனே!!! 

4 comments: