Saturday 21 September 2013

சென்னையில் மழை





தீப்பிழம்பாய் எரிந்து  கிடந்த சாலைகள்,
 
தத்தளிக்கின்றன கரை கண்டிட....!

விறகுகளாய் வெறித்து நின்ற மரங்கள்,
 
பச்சை கவசம் பூண்டு பளபளப்பாய்...!

கடும் வெயில் பார்த்து காய்ந்து போன குடைகள்,
 
மழையில் குளிக்கும் கொண்டாட்டங்கள் இன்று..!

குளிர் அறையில் அமரத் துடித்த காலம் போய்,
 
வெளியில் வராதா வெயிலென
தேநீர் குவளைகளுடன் பேச்சுக்கள் செவிகளில்..!

 
நீர் கண்டிடாத குளங்கள்,
நிரம்பி ஆறாய் ஊருக்குள்...!

 
தரைதட்டி குரிகித் திரிந்த மீன்கள்,
குதித்தெழுந்து கூச்சலிடும் குறும்புகள் குளத்தருகில்...

 
பூமித்தாயின் வயிற்றுப் பசியால்,
ஒடுங்கிய பள்ளங்களில் எல்லாம்..
 
நிறைந்து நிற்கிறது ,
மேகத்தின் கண்ணீர்...!

 
கோடைகாலப் பாதுகாப்பு ,
பலப்படுகிறது ஒருபுறம்...
 
மரங்களுக்கு நீரூற்றி..!

வான் நீலம் எதிரொளிக்கும் நீரில்ளெல்லாம்,
 
பசுமையின் ஆதிக்கத்தால் பங்கேற்கிறது பச்சை நிறம்..!

மறைந்து கிடந்த மாசுக்களும்...
 
மட்காத கழிவுகளும்...
துரத்தப்படுகின்றன தூரல்களால்...!!

 
துயர் நீக்கப் பிறந்த தேவதையின் சின்னமாய்...
சிறுகச் சேர்த்து ஒருநாளில் செலவிடும் முரண்வாதிகளாய்..
 
மேல்நோக்கி முகம் பார்க்க,
தீராமல் முத்தமிடும் காதல் கடலாய்....
  
வானுடைத்துக் கொட்டுகிறது,,,
சென்னையில் மழை!!! 

2 comments:

  1. அருமையான சொல் அமைப்பு தோழி... வாழ்த்துகள்

    ReplyDelete