Saturday 21 September 2013

அழகின் முழுமுதலே





உன் முகம்   பார்த்து  விரியாத கண்களே  இல்லை..
வெள்ளைப் பளிங்கு மாளிகையைப்  பார்த்து,
வியக்காதவர்,  எவரிருப்பார்  சொல்??

என்னையே,  எனக்கு  பிரதிபலித்துக்  காட்டும்,
உன் கண்ணாடிக் கண்கள்,
அம்மம்மா!!
உனக்காக  உருவெடுத்த பெயர் தான் “கயல்விழியா”??

எந்த கோணத்தில் பார்த்தாலும்,
அழகாகத்  தெரியும் ஒரே முக்கோணம்,
உன் மூக்குதானடி!!!!

நீரில் மலர்ந்திருந்த, 
இரு தாமரை இதழ்களைக்  காணவில்லையாம்..
கள்ளி,
அதை உன்  உதடுகளாக்கி  வைத்திருகிறாயா??

அழகே!

செவ்வண்ணப்  பாதங்களை ஏந்தும்,
காலணிகள், நானாக ஏங்கும், பேரழகி  நீ!!!

பெண்களாலே வர்ணிக்கப்படும்,
பெண்ணழகி  நீ !!!

தத்தித்  தத்தி நடக்கும்  குட்டி வாத்தைப்  போல் ,
சாய்ந்த  நடையழகி நீ!!!

வேறென்ன  சொல்ல ,,,

பிறைநேர்   நெற்றியழகி,
பிஞ்சுக்குழந்தை நிகர் பேச்சழகி!!!

கொடிமலர் இடையழகி,
இடை தொடும்  காற்குழலழகி!!!

உன் அழகிற்கு முற்றுப்புள்ளி  வைக்க  வாய்ப்பில்லை…
முற்றுப்புள்ளியற்ற  கவிதையை எழுத, எனக்கும் வழியில்லை…
வர்ணனைகளே, வர்ணிக்கக்கூடும்,
நீதான் என் “அழகின் முழுமுதலே “!!!

1 comment: