Friday 7 June 2013

ஆற்றங்கரை...



ஆழமான அமைதி
அவளின்
அந்தரங்கங்கள் மறைக்கும்
அழகிய நீரலைகள்

கொஞ்சிக் கொஞ்சி
கெஞ்சல் பேசும்  
குருவிகள்

காற்றின் கானத்திற்கு
இசையமைக்கும் குயில்கள்

மண் மணத்தில்
மயங்கித் தள்ளாடும்
மரங்கள்
இவையே ஆற்றங்கரையின்
அப்போதய அடையாளங்கள்

அன்று
காதல் செய்வோர்
களைத்து வருவோர்
கண்ணாமூச்சி
விளையாடும் மழலைகள்
காற்றோடு கானம்
கடத்தும் கன்னியர்கள்
என ,
இவளிடம் அடைக்கலமானவர்
எண்ணிக்கை
அதீதமாகவே இருந்து வந்தது

இன்று,
அழகு தேவதையவள்
அலங்கோலக் காட்சிகளை
அழுது புலம்பும்
அவல நிலை
அறிந்து விட்டோம்
மண்மேடுகள் மாயமாயின
மரங்கள் மறைந்து போயின
குளங்களும்,குட்டைகளுமோ
குன்றியே போயின

அன்றாடம்
கடந்து தான் செல்கின்றோம்
அவளை
நேர்கோட்டில் நிற்கையில்
ஏனோ ஒரு கணம்
விக்கித்தான் நிற்கின்றது நெஞ்சும்

பாவி அவளுக்கு
பாஷை தெரிந்திருந்தால்
பார்ப்போரிடமெல்லாம்
புலம்பியல்லவா தீர்த்திருப்பாள்
நமக்கு விளக்கி வைக்கத்தான்
வீனழித்துக் கொள்கின்றாளோ
தன்னைத் தானே ..?

காற்றை மாசுபடுத்தி
கரைகளைக் காயப்படுத்தி
இயற்க்கையினைத் தீண்டி
வரைமுறைகள் தாண்டி
மார்தட்டிக் கொள்கின்றோம்
நாமும் மனிதரென்று

என்னவளின் அவல நிலை
என்னாலும் உருவானதால்
வெட்கித்
தலை தாழ்த்துகிறேன் இன்று
மனிதனாய்ப் பிறப்பெடுத்ததற்க்காக மட்டும்

1 comment:

  1. ஆழமான அமைதி
    அவளின்
    அந்தரங்கங்கள் மறைக்கும்
    அழகிய நீரலைகள்
    Arumayaana uvamai kannamma...

    ReplyDelete