Wednesday 17 September 2014

வாழ்க்கை ஏன் இங்கு இத்தனை கடினமாக இருக்கின்றது




வாழ்க்கை ஏன் இங்கு
இத்தனை கடினமாக
இருக்கின்றது.

பிரச்சனைகளை
சுமந்து கொண்டு
பலிக்கு போகும்
ஆடு போல
ஒவ்வொரு நாளும்
போகின்றது

சிக்கல்கள்
இறுகிக் கொண்டே
மனதையும்
இறுக்குகிறது

எதிர்காலத்தின்
எச்சரிக்கைகள்
இப்போதே நரம்பை
தைக்கின்றன

உள்ளொன்றும்
புறமொன்றுமாய்
யாருக்கும் யாரையும்
பிடிப்பதில்லை

செய்து முடிக்க
வேண்டிய நிறைய
வேலைகள்
அப்படியே கிடக்கிறது

காலம் நெருங்க நெருங்க
எண்ணங்கள்
நொறுங்கிப் போகின்றது

விழுந்து எழும்முன்
கலைந்து போகின்றது
மழை மேகங்கள்

அழுது விழும்முன்
காய்ந்து போகிறது
கண்ணீர் துளிகள்

தூங்க கிடைக்கும்
அரிதான நேரங்களை
நேற்றைய குழப்பங்கள்
விடப்போவதில்லை

தேடி உழைத்தும்
கஷ்ட நஷ்டங்கள்
நமக்கு முன்னே
ஓடி ஓய்வெடுக்கின்றன.

வாழ்க்கை ஏன்
இங்கு
இத்தனை கடினமாக
இருக்கின்றது.




No comments:

Post a Comment