Thursday 16 October 2014

அழகாய் தெரிந்த கண்கள்


மழை தூறி முடித்து
இரவாகிக் கொண்டிருந்தது
அந்த மாலை நேரம்

நீ யாரென்று நானும்
நான் யாரென்று நீயும்
அறிந்திடாத
நம்முடைய முதல் நாள்
சந்திப்பு அது

மழையின் ஈரம்
உன் கால்களை
விழுங்க சற்று
ஓரமாய்
ஒதுங்கி நடந்தாய்

குறுகலான அந்த
ஈரப் பாதையில்
இப்போது
எனக்கெதிரே நீ
உனக்கெதிரே நான்

யார் விலகி வழி
விடுவது என்று
குழம்பிய அந்த 
சில நொடிகள்
என் விழி
உன் விழியைப்
பருகியது

சிந்திக்கும் நேரங்கள்
தீர்ந்தது
உன் கண்களை
சந்தித்த அந்நேரம்
முதல்

அது நிமிடங்கள் தான்…

நிமிடங்கள் தான்
என்றாலும்
அப்போது
அந்த கண்கள்
ஏன் அழகாய்த் தெரிந்தன.

இனி
எதேட்சையாய்
நமக்குள் சில
சந்திப்புகள் நிகழ்ந்து விடின்
உன்னிடமிருந்து
என்னை 
எங்கனம் மீட்பது

என்ன நிகர் கண்டேனோ
தெரியவில்லை...

அது நிமிடங்கள் தான்
என்றாலும்
அப்போது
அந்த கண்கள்
ஏன் 
அழகாய்த் தெரிந்தன.


No comments:

Post a Comment