Wednesday 29 October 2014

போதுமென்று நினைக்கிறேன்























இன்றைக்கும்
இந்த
நிசப்த
இரவினைத்
தூங்காது கடக்கப்போகிறேன்
என்று தெளிவாய்த் தெரிகிறது

மாதத்தின் கடைசி தேதி
பெருகிடும் தேவைகள்
பிடிக்காத அலுவல்கள்
அடம்பிடிக்கும் சோம்பல்
கருமேகங்கள் அற்ற வானம்
எப்போதும் அல்லாத வெயில்
நெரித்து தள்ளிய பேருந்து
புழுங்கிப் போன உடல்
குழம்பி கிடக்கும் மனம்
சவரம் செய்யாத முகம்
முடிக்க முடியாத சில கவிதைகள்
மாதங்கள் துவைக்காத போர்வை
நாற்றமெடுக்கும் காலுறைகள்
காற்றோட்டம் இல்லாத மெத்து
அடிக்கடி இரையும் பண்பலைகள்
சண்டையிடும் தெருநாய்கள்
பிடுங்கும் கொசுக்கள்
விரட்டும் வலைத்தள அரட்டைகள்
விடாத ஒற்றைத் தலைவலி

நெடுநேரமாய்
அழைப்பை ஏற்காத தலைவி

போதுமென்று நினைக்கிறேன்
இன்றைய இரவினை

தூங்காது கடப்பதற்கு

No comments:

Post a Comment