Tuesday 21 April 2015

அழகும் அமைதியும்




முன்பெல்லாம் 
நீ அடிக்கடி கண்ணில் தென்படும்
அந்த மாட வீதிகளில்
சுற்றிக் கொண்டிருப்பேன்

என்றாவது
நீ எதிரெதிர் வருகையில் 
சின்னதாய் 
ஒரு புன்னைகை புரிவாய் 
அந்த புன்னகையின் 
பிம்பத்தை 
அப்படியே அடி மனதில் 
பதிவிறக்கம் 
செய்து விடுவேன்

அவ்விடம் விட்டு
நீ கடந்ததும் பரவும் 
உன் ஸ்பரிசத்தின் வீரியம் 
என் மூச்சினில் ஏறிடும் அந்நேரம்
உன் மணம் சென்றிடும் 
தடம் சென்றிடுவேன்
என் மனம் நின்றிட 
இடம் தேடிடுவேன்.


பார்க்க
முடியாது என்று தெரிந்தும்  
அதே போன்றதொரு 
அழகிய நினைவுகளுடனே 
அன்றும் அந்த வீதிகளில்
சுற்றிக் கொண்டிருந்தேன்

கொடுக்கப் போவதில்லை 
என்று தெரிந்தும் 
உனக்காக வாங்கிய 
ஆறேழு பரிசுகள்

பேசப்போவதில்லை 
என்று தெரிந்தும் 
உனக்காக மனனம் செய்த 
நாலைந்து கவிதைகள்

வரப்போவதில்லை என்று 
தெரிந்தும் நீ வந்திறங்கும் 
பேருந்து நிலையத்தில்
அட்டையாய் ஒட்டிக் 
கொண்டிருந்தேன்

கொடுத்துவிட்டு பேசுவதா
பேசிவிட்டு கொடுப்பதா
என்று குழம்பியதில்
நீ வரும் பேருந்து 
என் முன் வந்து நின்றது

தேடி அலைந்ததில் உன்னைத் 
தொலைத்ததுதான் மிச்சம்

நேரங்கள் கடந்தோடி என்னை 
இழந்ததுதான் மிச்சம்

அன்று ஏனோ  நீ வரவில்லை





No comments:

Post a Comment