Wednesday 1 January 2014

ஏதோ போங்கப்பா...


புலர்ந்த பிறகு புத்தாண்டு
மற்றுமொரு நாளாகவே
கடந்து செல்கிறது.

யாழியை நினைக்கக்கூடாது,
மதுவை தொடக்கூடாது,
சர்க்கரை நோயாளி
சர்க்கரையை குறைப்பதுபோல்
கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்,
இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்,
கலிங்கத்துபரணி படித்திட வேண்டும்,
என எடுத்துக்கொண்ட
உறுதிமொழிகளையெல்லாம்
மூட்டைக்கட்டி தூர போட்டாகிவிட்டது.

இரவில் அழைத்த நபர்களையும்,
அழைக்கப்பட்ட நபர்களையும்,
அலைபேசியில் சரிபார்க்கும் போது
“இவன் கூடவெல்லாம் பேசினோமா”
என்பது போன்ற ஏதோவொரு
மென்னதிர்வு ஏற்பட்டுவிடுகிறது.

பதினைந்து ரூபாய்
வாழ்த்து அட்டை வாங்கி
அஞ்சல் செய்தபோது
மகிழ்ந்த மனம்,
ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு
குறுஞ்செய்தி அனுப்பிட
பதைபதைத்து போகிறது.

அழைக்கபடாதவர்களின்
தொடர்பு எண்களை
பார்க்கும் பொழுது,
அவர்களை அழைத்து
வாழ்த்து சொல்லும்
எண்ணம் துளியுமில்லை.

எது எப்படியோ...
மீண்டும் ஒருமுறை
உங்கள் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2 comments:

  1. Unmai Yoki... புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பதினைந்து ரூபாய்

    வாழ்த்து அட்டை வாங்கி

    அஞ்சல் செய்தபோது

    மகிழ்ந்த மனம்,

    ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு

    குறுஞ்செய்தி அனுப்பிட

    பதைபதைத்து போகிறது.

    Nice lines

    ReplyDelete