Wednesday 1 January 2014

குடிகார தின வாழ்த்துக்கள்


குடிமக்கள் அனைவருக்கும் முன்கூட்டியே "குடிகார தின வாழ்த்துக்கள்".

ஆங்கிலப் புத்தாண்டு என்ற பெயரில் இரவு முழுதும்
குடித்து
 கும்மாளமிட இப்பொழுதே தயாராகி வருகின்றன
நமது
 நகரங்கள்சில காலம் முன்பெல்லாம்,
குடிப்பதற்கு செல்பவர்கள் யாருக்கும் தெரியாத வண்ணம்
மறைந்து
 மறைந்தே குடித்து வந்தனர்ஆனால்,
இப்பொது டீக்கடையில் டீ குடிப்பது போல் சர்வ
சாதாரணமாய்
 ஆகிவிட்டது இப்பழக்கம்.
அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு என்பது குடிகாரர்
தினமாகிவிட்டது
ஜோடிகளோடு ஆட்டம் போடுவதற்கும்,
கேளிக்கை செய்வதற்கும் இந்த குடிகாரர் தினம் மிகவும்
வசதியாய்
 உள்ளது. "பப்கல்சர் பெருகி வரும் இக்காலத்தில்,
ஒவ்வொரு க்ளப்புகளும் வாலிபர்களை கவர்ந்திழுக்க பல
கவர்ச்சி
 திட்டங்களை அறிமுகப் படுத்துகின்றன.
பெண்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு என பல விடுதிகள்
அறிவிக்கின்றன
பெண்கள் நிறைய
கூடினால்தானே
 குடிமகன்களுக்கு உற்சாகம் ?
இதில் புத்தாண்டு பிறக்கையில் வசதியாக சில நிமிடங்கள்
மின்சாரத்தையும்
 அனைக்கிறார்களாம்திசை மாறி செல்லும்
இளம்பெண்கள்
 இதன் விளைவுகளை யோசிக்கிறார்களா ?
கோடிக்கணக்கில் நாம் அரபு கொள்ளையர்களுக்கு முந்திரி,
பாஸ்மதி அரிசிபாதாம்
என்று
 உழைத்து உற்பத்தி செய்தவற்றை எல்லாம்
ஏற்றுமதி
 செய்துஅவர்களின்
கச்சா
 எண்ணையை இறக்குமதி செய்கிறோம்.
நமது குடிமக்களோ பெட்ரோலை தங்கள் வாகன டாங்குகளில்
நிரப்பி
 "ஹாப்பி ந்யூ இயர்என்று ஏதோ சாதித்துவிட்டது
போல்
 நகரங்களை வலம் வருகிறார்கள்.
எத்தனை விபத்துக்கள் ? எத்தனை பெற்றோர்கள் வயிற்றில்
நெருப்பை
 கட்டிக்கொண்டு இருப்பார்கள் ?
காவலர்களுக்கு தான் இவர்களை கட்டுபடுத்த
எத்தனை
 சிரமம் ?
சந்தோஷமாய் இருப்பதில் தவறில்லைஆனால்
அது
 கண்மூடித்தனமாக சென்று பின்னர் வருத்த
படுமாறு
 இருக்கக் கூடாதுஇதை பழமைவாதம்
என்று
 ஒதுக்கி விடாதீர்கள்உங்கள்
பகுத்தறிவு
 கொண்டு யோசித்து பாருங்கள்.

1 comment:

  1. தோழர் யுவராஜ்
    Nandru Uraikka Sonneerkal

    ReplyDelete