Wednesday 22 July 2015

எதற்காக நான் பிறந்தேன்?










எதற்காக நான் பிறந்தேன்?

எதற்காக நான் பிறந்தேன்?

கேட்க கேட்க ஆயிரம் ஆயிரம்

கேள்விகள் உள்ளே எழுகிறது.


நினைத்தது யாவையும் செய்யவில்லை

யாரோ நினைத்ததை செய்யும் கருவியாய்

உழைத்து, இல்லை பிழைத்து கொண்டிருக்கிறேன்.


ஆசையாய் கண்ட கனவெல்லாம்

கண்முன்னே கரைந்துக் கொண்டிருக்கிறது.

பிறருக்காக வாழவா நான் உயிர் வளர்க்கிறேன்?

பிறருக்காக உழைக்கவா நான் தினம் உண்கிறேன்?

பிறருக்கான கனவை நான் நிஜமாக்கினால்

எனக்கான கனவை யாரிடம் நான் புகுத்துவது?

திசைதெரியாத பயணம்,

துணையில்லாத தனிமை,

கடலுக்கும் கரையுண்டு!

என் மனதின் மரண ஓலத்தை கேட்பாரில்லை!!!

No comments:

Post a Comment