Wednesday 22 July 2015

ஓரிரு நொடிகள் தான்..


























மாலை தொடங்கி
விடியலாகிவிட்டது
இன்னும் சதா 
நீ பெய்து கொண்டே இருக்கிறாய்
துளியும் வெளிச்சமில்லாத
இந்த பொழுது எந்நேரமென்று
தெரியவில்லை
நீ நிற்பதற்கான சூசகங்கள்
ஒன்றும் தென்படவில்லை
இன்னும் சிறிது நேரத்தில்
நன்கு விழித்திருந்த 
அந்தச் சுடரும் கரைய இருக்கிறது
உன்னுடன் நனைய
ஆசையிருந்தும் இப்போது
நனையும் நிலையில்
நான் இல்லை.
ஏனெனில்
நினைவில்
உதிக்கின்ற ஓரிரு
வார்த்தைகளையும்
மீதிச் சுடர் முடியும் முன்
எழுதி முடித்தாக வேண்டும்...
காற்றோடு எதோ சதி செய்து
சாளரம் தாண்டி
உன் எரசலால் என் பகுதி
நனைக்க முற்படுகிறாய்
உடல் சிலிர்க்கிறது
ஓரிரு நொடிகள் தான்..
எழுதும் நிலையிழந்து
என்னை முழுதும் உன்னுள்
நனைக்க விழைந்தேன்..
நனைந்தேன்...
எண்ணம் பறித்து
என்னை முழுதும்
உனது ஆக்கினாய்...

No comments:

Post a Comment