Thursday 6 August 2015

தேசத் தந்தை : அப்துல் கலாம்







என்னவென்று தொடங்க உன்னைப் புகழ,
சர்வமுமாக நிறைந்திருக்கிறாய் புனிதனே!

புண்ணியம் தேடி கால் நனைக்கும் கடைத்தீவினில்
உன் முதல் மூச்சை விட்டு, கண்ணீர் சிந்தி,
அதன் பாவம் கழித்தாயே!

திரும்பும் திசையெங்கும் கடல்,
உன்னை சூழ்ந்து ஆட்கொள்ள முயல,
சராசரி மனிதனாக நீயிருந்திருந்தால்,
கடல் தாண்டாத வெறும் உடலாக மட்டுமே இருந்திருப்பாய்.

கைக்கு எட்டா உயரம், விண்னை கிழிக்கும் பயணம்
இதுவல்லவா உன் இதயம் சொன்ன கனவு!

ஒரு துறையில் சிறந்து விளங்க பலர் சிரமப்பட,
சிறுபுன்னகை செய்துக்கொண்டே கால் பதித்த
ஒவ்வொரு பணியிலும் சிறந்து, வாகை சூடிய
தனித்துவன் நீயல்லவா!

சிறுபாண்மையில் பிறந்து,பெருங்கனவு கண்டு
வேறுப்பட்ட உலகுமுன் கண்டதை நிறைவேற்றி,
திறமைக்கு தடையில்லையென நிருபித்த
உயர்ந்த உயிரொளி நீயல்லவா!

உறக்கத்தில் காண்பது கனவன்று, உன்னை
உறங்கவிடாதிருப்பதே கனவென்று,
புதுவழிக் காட்டி, நம்பிக்கை ஊட்டி,
என்போன்ற இளைஞர்களுக்கு வழி காட்டியானாய்,
வழித்துணையும் ஆனாய்!


ஆசிரியர்,
அணு விஞ்ஞானி,
இசை கலைஞர்,
எழுத்தாளர்,
முதல் குடிமகன்,
எத்தனை பரிணாமம் நீ எடுத்தாய்,
அத்தனையிலும் உன் பெயர் பதித்தாய்!

மனதுக்கு பிடித்த காரியத்தை செய்து கொண்டே
உயிர்நீத்தல் எத்தனை பெரிய உன்னதம்!
உன் கடைசி நொடியிலும் மாணவர்கள் மனதில்
கனவு விதைகளை விதைத்துத் தானே சென்றிருக்கிறாய்!

இனி,
எம் மதத்தில் பிறந்தவனும் தன் மகனுக்கு
நின் பெயர் வைக்’கலாம்’,

No comments:

Post a Comment