Saturday 15 August 2015

கனவுலகின் காவலன்





அகண்ட தோள்கள்
ஆழமான கண்கள்
மிடுக்கான தோற்றம்
நின் மேல் 
என் நாட்டம் 

யார் இவன்?
கனவுலகின் காவலனா
இல்லை,
காவியம் சொல்லும்
காதலனா?

தோழிகளின் உச்சரிப்பும்
தொலைக்காட்சியின் நச்சரிப்பும்
உள் ஊடுருவா நிலை!!!
நீ வரும் நேரமாகிவிட்டது...

பதிந்திடா கால் தடமும்
பகிர்ந்திடா பல் மொழியும்
பாவையன்றி,
நீ அறிவாயோ?

ஏனோ 
வழக்கம் போல்
இன்றும் நீ வரவில்லை!!
இதயம் இடியிடிக்க
இமைகள் மழையடிக்க
கன்னமிரண்டும்
கரைந்தே விட்டது.

கண் கானா ஏக்கமும்
தரை தட்டும் தாக்கமும்
என்னை முட்ட
கனவலைகளில்  கால் பதிக்கிறேன்.

மீண்டும்,
அதே ஒற்றை ரோஜாவுடன்
மொட்டை மாடியில் நீ!

நிஜத்தில் வராத
நெருடல்களை மறைத்து
நின்னருகில் நான்!

நீ கனவுலகின் காவலன்
நான் உனதருமை நாயகி

No comments:

Post a Comment