Wednesday 9 January 2019

ஒருவனும் மரணமும்

மீண்டும் விழித்தெழுந்து நீயில்லா
வெறுமையை உணர வேண்டியதில்லை

மீண்டும் விழித்தெழுந்து முதுமையை
உணர வேண்டியதில்லை

மீண்டும் விழித்தெழுந்து இவ்வுலகின்
மீதான கோபத்தை உணர வேண்டியதில்லை

மீண்டும் விழித்தெழுந்து என் வாழ்வின்
அணைத்து தவறுகளையும்
அசை போட வேண்டியதில்லை

மீண்டும் விழித்துதெழுந்து மீண்டும்
விழித்துவிட்டோமே என
கவலை கொள்ள வேண்டியதில்லை

ஆனாலும் தினம் தினம் வந்து நிற்கும்
மரண தேவனைப் பார்த்து
என் பேரனுடன் விளையாட
இன்னும் ஒரு நாள் தருவாயா என
கேட்டகவும் தவறுவதில்லை
                                   - சராசரி இந்தியன்

2 comments: