Saturday 18 May 2013

ஆடுகளம்





வன்மை வெல்வதும்
மென்மை மறைவதும்
பகைமை பகிர்வதும்
உயிரணுக்கள் உரைவதும்
இங்கே  தான் 

மெல்லிதயம் கொண்டார்க்கும்
கண்ணீரில் கரைவார்க்கும்
காரியம் மறந்தார்க்கும்
தன்னிலை உணரார்க்கும்
தாகம் தனிந்தார்க்கும்
இங்கே இடமில்லை 

தற்பெருமை பேசுவாரிடையே 
தன்னம்பிக்கையும்
இலட்சங்களைப் போற்றுவாரிடையே
இலட்சியங்களும்
கொழுத்தாடும் பொய்களிடையே
மெய்களும்
மறைந்து,மறித்த கதைகள்
ஏராளம் இங்குண்டு 

ஆடுகளமதில் ,
அழகாய்க் காய் நகர்த்தி
அறியாரைப் பேதையாக்கி
அண்டம் ஆள்கின்ற கூட்டம்
அன்றாடம் அதிகரிக்கின்றது

இங்கே,
மனம் தளராதவனும்
தலைக்கனம்  கொள்ளாதவனும்
தனிப்பாதை வகுத்தவனும்
தனித்து நின்றவனுமே
வான் புகழ் அடைகின்றான் 

சகுனிகள் பலருண்டு
சாணக்கியனும் அதிலுண்டு
இவர்களின் இன்னல்களை
கொன்று கொண்டு வருவார்க்கே
வெற்றிக் கனி கிடைப்பதுண்டு 

வாழ்வும்,வீழ்வும்
தரும் ஆடுகளம்
வழி காட்டி
நடத்திச் செல்லும்
ஆடுகளம்
விடியலை
நமதாக்கும் ஆடுகளம்
விண்ணையும்,
வளைத்துக் காட்டும் ஆடுகளம்

இது ,
உணர்வையும்,உயிரையும்
பணயம் வைத்து
ஆடும் களம்

2 comments:

  1. ஆடுகளம் எத்தனையோ அர்த்தங்களைப் பொதித்து வைத்திருப்பதைப் போல் தோன்றுகிறது..

    ReplyDelete