Friday 20 June 2014

யாழிக்கு கவிதைகள்

































இலட்சம் இரவுகளை

கடந்த பின்னும்

உன் நினைவுகள் மட்டும்

நெஞ்சின் ஒரு ஓரமாய்

நிழலாடிக் கொண்டேயிருக்கிறது.


உதடுகள் விரியா

உன் மென் புன்னகையாகட்டும்,

புன்னகைக்கும் போது

கன்னத்தில் விழும் குழியாகட்டும்,

தாடைக்குக்கீழ் இருக்கும் மச்சமாகட்டும்,

காதோரத்து குழலை

சரிசெய்து கொண்டேயிருக்கும்

மெல்லிய விரல்களாகட்டும்,

எல்லாமே அப்படியே

அடி மனதில் பதிந்தேயிருக்கிறது.


உன் விரல் கோர்த்தபடி

ஒரு தொலைதூர பயணம்,

கையில் தேனீர் கோப்பையுடன்

உன்னுடன் நான் கதைக்கும்

ஒரு அந்திப்பொழுது,

நீ எதிர்பாரா நேரத்தில்

உன் உதட்டில் பதியும்

என் ஒற்றை இதழ் முத்தம்,

விடிந்த பின்னும்

நீண்டு கொண்டேயிருக்கும்

உன் மடியில் என் தூக்கம்...

இவற்றையே,

என் உறக்கமில்லா இரவுகளில்

நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.


இவையாவும் கனவிலும் நிறைவேறா

கானல் காட்சிகளென்பதை

நானும் அறிவேன்.

என் செய்வது...?

ஆசை யாரை விட்டது.

ஆசை பீறிடும்

அத்தகைய இரவுகளிலெல்லாம்

சாரல் நனைத்த

சாளர கண்ணாடியாய்

மனம் கலங்கியேயிருக்கிறது.


இந்த நொடியை

நான் கடந்தாக வேண்டும்.

அதுவும் இயல்பாக

கடந்தாக வேண்டும்.

கொஞ்சதூரம் நடந்துச்சென்று வரலாம்,

என மனம் அழைக்கிறது.

உதட்டின் ஓரத்தில்

ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு

அப்படியே உறங்கி போகிறேன்.

இந்த நொடியை

நான் கடந்தாக வேண்டும்,

அதுவும் மிக இயல்பாக...


3 comments:

  1. Romba naaluku apuram yaaziku kavithaigal, arumaiya iruku nanba..

    ReplyDelete
  2. சாரல் நனைத்த
    சாளர கண்ணாடியாய்
    மனம் கலங்கியேயிருக்கிறது..... Naan Rasithaa Varikal nanba

    ReplyDelete