Tuesday 19 November 2013

சச்...சி..ன்...சச்சின்...





அமைதியாய் இருங்கள்
நான் உணர்ச்சியின் உச்சத்தில்
இருக்கிறேன்
என்ற போதே...
என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது...

உருக்கத்துடன் நீ
உரையாற்றி கொண்டிருந்தாய்
உரைந்து போய்
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மிந்தடை நேரமாகியும்
மின்சாரம் நிற்கவில்லை
உன் உரை கேட்க
அதுவும் உரைந்துவிட்டதோ..என்னவோ...

உன் ஒரு ரன்னுக்காக
இந்தியாவே பிரார்த்திக்கும்..
இன்று உன் உரைக்காக இந்தியாவே
உரைந்து நிற்கிறது.
இவையனைத்தும் உன்னால்
மட்டுமே முடியும் சச்சின்...

தீராத காதல் தீர்ந்துவிட்டது
என எண்ணி
பிரிந்து செல்கிறாய்..
உன் தடயங்கள் என்றுமே பிரியாது
என்பதை மறந்து விட்டாயே சச்சின்

உன் குடும்பம் உனக்காக
செய்த தியாகங்களை
அடுக்கிக் கொண்டிருந்தாய்
நீ நாட்டுக்காக செய்தவற்றை எல்லாம்
நான் அசை போட்டுக்கொண்டிருந்தேன்..

அசைப் போட்டு அடக்கிவிட முடியுமோ
உன் அற்புதங்களை
அசந்து நிற்கிறேன்..

உன் காதுகளில் என்றும்
கேட்டுக்கொண்டே இருக்கும்
வார்த்தைகளை
மீண்டும் உனக்காக
உரைக்க உரைக்கிறேன்...
சச்..சி..ன்... சச்சின்...
சச்..சி..ன்...சச்சின்...

உனக்கு தெரியும் சச்சின்..
இன்றும் நீ அவுட் இல்லை என்று..
ஆனால் வழக்கம் போலவே
அமைதியாய் வெளியேறி
கொண்டிருக்கிறாய்..

அப்படி நீ வெளியேறிய போதெல்லாம்
அமைதியாவே நானுமிருந்தேன்..
ஆனால் இன்று முடியவில்லை சச்சின்
கண்ணீர் கண்ணை முட்டுகிறது...

கடைசியாய் ஒருமுறை
உன்னை வளர்த்தெடுத்த
மைதானத்திற்கு முத்தம் ஒன்றை
பரிசளித்து வா..
இல்லையேல் நீ மீண்டும் வருவாய்
என காத்துக் கொண்டிருக்கும்...

No comments:

Post a Comment