Wednesday 11 December 2013

வந்த நாள் முதல்


இந்த புத்தகம் வாசிக்கும் போது உண்மையில் சில வரிகள் நம் வாழ்வில் கடந்து சென்ற சில நியாபகங்களை நினைவு படுத்துகின்றது. பள்ளியில் தொடங்கிய காதலின் நீட்சி பள்ளி முடிந்த பிறகு மீண்டும் கல்லூரிக்கு செல்லும்போது எவ்வாறெல்லாம் பயணப் படுகிறது என்பது தான் இந்த வந்த நாள் முதல். திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு செழியன் அவர்களால் எழுதப்பட்டு விகடன் பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை அலசி அதில் சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

பள்ளியில்....

என் இருக்கையில் நான் மூன்றாவது
உன் இருக்கையில் நீ மூன்றாவது
பையன்களில் முதல் மதிப்பெண் எனக்கு
மாணவிகளில் உனக்கு.

சூரிய ஒளி முதல் வரிசையிலிருந்து
பின் நகர்ந்து உன் நாட்டுக்கு வருகிறது
நீ ஒளியின் மீது எழுதத் துவங்குகிறாய்.

நாம் உடுத்தும் உடைகளின் வண்ணம்
பலமுறை பொருந்திபோகிறது.
திருத்துவதற்காக மேசை மீது நோட்டுக்கள்
அடுக்கப்படும் போது நம் பெயர்கள்
அடுத்தடுத்து வருகையில்
ரகிசியமாய் ஒரு புன்னகை மலர்கிறது.

பேருந்தில்....

காலை 8.20, பேருந்து முழுக்க மாணவ மாணவியர்,
முதல் நாள் பயணம்
அடுக்கடுக்காய் அமர்ந்த முகங்களின் நடுவே
சன்னலோரம் ஒரு முகம்
யதேச்சையாய் இடித்து
வருத்தம் சொல்லி விலகுவது போல
நம் பார்வைகள் அடிக்கடி விலகிக்கொள்கின்றன
சில நரங்களில் நெரிசலில் இடம் கிடைத்தும்
நீ நிற்கிறாய்; நானும் நிற்கிறேன்...
நிறுத்தம் வந்ததும் நீ பெண்கள் பள்ளி நோக்கிச் செல்கிறாய்...

விடுமுறையில்...

வீடு - மூன்று வேலைக்கான
உணவு விடுதியை மாறுகிறது
மீதப் பொழுதுகளில் மைதானம்..
நண்பனின் வீடு...
நூலகம் அல்லது குளக்கரை
போகும் திசையறியாது நடக்கிறேன்...

நூலகத்திற்கு செல்லும் வழி
யாருமற்ற தொலைவில்
மஞ்சள் புள்ளியென மிதந்து வரும்
உன்னைப் பார்கிறேன்.

என்னைப் பார்த்ததும் கால்கள் ஊன்றி
சைக்கிளில் இருந்து இறங்குகிறாய்.
நம் நிழல்கள் நெருங்கி வருகின்றன
மெல்லிய கொலுசொலி
என்னைக் கடந்து அணைகிறது...
ஊரின் சப்தங்கள் மீள்கின்றன...


இன்னும் இப்படியே நீண்டு கொண்டே போகிறது இந்த தீராக் காதல்…

No comments:

Post a Comment