Tuesday 17 December 2013

உனக்காக எழுதும் நான்



விழிகள் பார்த்த ஆரம்பம் ,
எதிர் பாராமல் எனக்கு கிடைத்த
நல்ல நண்பன் நீ!
பல முறை பார்த்து இருக்கிறோம்!
பேச தொடங்குவோம்
என்று சற்றும் நினைக்கவில்லை!!!

பேச மாட்டாய் என்று நினைத்த நொடிகள்,
வெடித்து சிதறிவிரிந்தது புதிய வாழ்க்கை  கோடுகள்
இப்போது தொடங்கியது 
சற்றும் யோசிக்காமல்கிடைத்த
உன் அன்பும்உன் ஊக்கம்மும்,
என்னை மாற்றி இப்போது 
உனக்காக கவிதையும் எழுதுகிறேன்!

"நீயில்லா - நான்", என்ற உறவு இல்லை!
பிரியும் வலிவர கூடும்என்ற பயம் இல்லை!
வண்ணங்கள் மறைந்துவலிகள் நிறைந்து,
தவிக்கும் மனம் தரும்நட்பும் இல்லை!
வெறுமையாய் இருக்கும் பொழுதுகள்,
உன்னோடு இருக்கும் போது வந்த மகிழ்ச்சிக்கும் எல்லைகள் இல்லை!
 ஆனால், " இல்லை " என்ற சொல்லிற்கு,
 நீ உயிர் கொடுத்து,
விலகிப் போனால்!
நான் மேலேசொன்ன "இல்லைஎன்ற
வாரத்தை அனைத்திற்கும் அர்த்தம் பிறக்கும் !
அர்த்தம் இல்லா வார்த்தைகளாக இருக்க வேண்டுகிறேன் !
உன் நீங்காநட்பு என்றென்றும் கிடைக்க விரும்புகிறேன்..

2 comments: