Wednesday 11 December 2013

கனவெனும் விளங்கா புதிர்


பெயர் மாரிமுத்து
கூலி வேலை செய்யும் பெற்றோர்.
தினம் ஒரு வேளை, எப்போதாவது
இரு வேளை சாப்பாடு.
பெயர் சுந்தரம்
ஏழு தலைமுறைக்கு பின்னும்
மீதமிருக்கும் சொத்து
நான்கு வேளை சாப்பாடு
பழங்கள், தீனிகள் அதில் அடக்கமில்லை
மாரிமுத்து கனவில்,
”ஒரு நாள்
எப்படியாவது சுந்தரமாக வாழவேண்டும்”
சுந்தரத்திற்கு கனவு எந்நாளாவது வந்திருக்குமா
“ஒரு நாள்
மாரிமுத்தாக வாழவேண்டும்” என்று?
புரியாத புதிர் கனவு!!!

No comments:

Post a Comment