Sunday 13 April 2014

என் நட்பே - 2


























என் மகிழ்ச்சியின் போது மனம் மகிழ்ந்தவளே
என் துன்பத்தின் போது கண்ணீர் துடைத்தவளே 
என் உணர்வுகளுக்கு உரு கொடுத்தவளே
என் சிரிப்பிற்கு காரணமானவளே

ஒருநாளும் நினைத்ததில்லை!!!!!!!!!!!!!!!
என் கண்ணீருக்கு காரணமாவாய் என்று
என் வாழ்வின்  வானவில்லாய் சில நொடியில் பிரிவாய் என்று
நீர்குமிழியாய் மறைவாய் என்று………..

என் இரவுகள் பகலாய் போனதடி  
நாம் ரசித்த தென்றல் காற்றும்
புயலாய் தோன்றுதடி
நீ இல்லா என் இரவில்

புரியா புதிராய் உன் பிரிவு எனக்கு
வளர்ந்து தேய பிறை நிலா அல்ல 
நம் நட்பு!!!!!!!!!!!!!!!!

என் வாழ்வில்
முதல் முறை உணர்கிறேன் நட்பே
தனிமையின் வலியை

என் மனதின் சோகங்களை கண்டுபிடித்தவளே
இன்று உன் மனதில் நான் இல்லாமல் போனது ஏனோ???

வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை தோழி 
உன் பிரிவின் வலியை
மரணம் என்னை தழுவும் வரை

என்றும் என் உயிர் உனக்காக

1 comment: