Friday 11 April 2014

காற்றில் கலைந்தோடிய கவிதைகள்


மழையின் பெயரிட்டு
தமிழின் விதையிட்டு
அழகழகாய் முளைத்தன
கவித்தமிழ் பூக்கள்
அள்ளக் குறையாத
அட்சய பாத்திரமாம் உள்ளே
திகட்டாத தெளி தேனாம்
தாய் தமிழ்
வரண்டு அழுத நிலத்தினுள்
திரண்டு எழுந்த நீரூற்று
இருப்பிடம் வெவ்வேறு
இணைந்தது எவ்வாறு
எண்ணங்கள் வெவ்வேறு
கலந்தது எவ்வாறு
தூரிகை கரைய
தூய்தமிழ் தவழ
தூமழையில்
அன்றோ தினமும் திருவிழா
என்னாச்சோ ஏதாச்சோ
என்றும்
இருண்டே கிடக்குது வானம்
வரண்டே கிடக்குது பூமி
நில்லெனப் பெய்த மழை இல்லை
சில்லெனத் தெரித்த துளி இல்லை
தாகம் கொண்டு பொழிந்த
கவிகளும் இல்லை
காற்றில் கலைந்தோடி
அழிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களையும்
திறமைகளையும்
என்ன செய்யப்போகிறோம்




No comments:

Post a Comment