Wednesday 21 August 2013

நட்பாட்டம்







தான் ரசித்த அழகிகளை
எனக்கு காட்டுபவனும் அவனே…
அதில் மிக அழகியை
எனக்கு தங்கையாக்குபவனும் அவனே…




உன் படுக்கையறையில்
நம் இரவை
பகிர்ந்துக்கொள்ள அனுமதித்த
உன் தந்தையின் கண்களில் உணர்ந்தேன்
நம் நட்பின் தன்மையை.




நட்பிற்கும் காதலுக்குமிடையே
மிகமெல்லிய இடைவெளிதான் இருக்கிறது.
ஆனால் அந்த இடைவெளியை கடக்காமலேயே
பயணித்துக் கொண்டிருக்கிறோம்
நெடுநாட்களாய்…




அகிரா முதல் அனுராக் வரை,
பாலசந்தர் முதல் பாலா வரை,
நித்தம் ஒரு உலகத்தை
என் மடிகணிணியில் திரையிட்டு
என் ரசனையை சீர்திருத்தியவன் நீ…
பாரதியையும், பாவேந்தனையும்
கல்கியையும், கள்ளிக்காட்டு இதிகாசத்தையும்,
உனக்கு பரிசளித்து
உன்னை உருவாக்கியவன் நான்.


    -யோகி.


No comments:

Post a Comment