Sunday 18 August 2013

பாவ நகரம் - XII

       அந்த டைரியின் வரிகளை அவன் கண்கள் விழுங்க ஆரம்பித்தன. ஜோசப்பின் கையெழுத்தில் அவன் வாழ்வின் மர்மம் விளங்க ஆரம்பித்தது.
         “கடவுள் எல்லாரையும் ஒரு காரணத்துக்காகதான் படைக்கிறார்னு நான் முழுசா நம்புனேன். என்னோட படைப்பு இந்த குக்கிராமத்துல இருக்குற பாவபட்ட ஜனங்களுக்கு கடவுளோட பேர்ல வாழறதுக்கு நம்பிக்கை விதைக்கிறதுனதுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன், அந்த கர்ப்பிணி பொண்ணு சர்ச் படிக்கட்டுல வந்து மயங்கிக் கிடந்த அன்னிக்கு வரைக்கும். “

இருபது வருடங்களுக்கு முன் காரை என்னும் குக்கிராமம்

      ஜோசப் வழக்கம் போல் ஜபத்தை முடித்து விட்டு, பாவ மன்னிப்புகளை வழங்கி விட்டு தனது அறைக்கு திரும்பும் போது அந்த கர்ப்பினி பெண் சர்ச் வாசலில் வருவதைக் கண்டார். அவள் உருவம அருகே நெருங்க நெருங்க அவள் வலியால் துடிப்பது தெரிந்தது. அவள் முகத்தில் அழுததற்கான அடையாளங்கள் தென்பட்டன. மிகவும் அழுதிருந்தாள்.
யாரும்மா நீ?”
வலி அதிகமாருக்கு பாதர்"
ஜோசப் அவளை அருகிலிருந்த ஒரு பெஞ்சில் அமர செய்து விட்டு, மருத்துவச்சிகாக ஓடினார்.
சில நிமிடங்களில் ஒரு வயதான மூதாட்டி வர, அவளுடன் உதவிக்கு சில கிராமத்து பெண்களும் வந்திருந்தனர். அவளை ஒரு அறைக்குள் கூட்டிச் சென்றனர். அப்போது அவள் ஜோசப்பை பார்த்தாள். ஜோசப்புக்கு அப்பார்வை அவளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்பது போல் இருந்தது. ஜோசப் இறைவன் முன் மண்டியிட்டு வேண்ட ஆரம்பித்தார். ஒரு சில மணித் துளிகள் அந்தப் பெண்ணிண் அலறல் ஜோசப்பின் காதுகளில் விழுந்துக் கொண்டே இருந்தது.
கடவுள் எல்லாரையும் ஒரு காரணத்துக்காக தான் படைக்கிறார்.ஆனால் பெண்கள்தான் தன் வலியையும், கஷ்டத்தையும் பொறுத்துக்கிட்டு கடவுளோட படைப்புகள இந்த உலகத்துக்கு கொண்டு வராங்க" அவர் மனதில் இது போன்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, ஆண் குழந்தை பிறந்துள்ளது என அந்த மருத்துவச்சி வந்து சொன்னாள்.
ஒரு சில நாட்கள் கழித்து அவள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. அவள் அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்து ஒரு புத்துணர்ச்சி அவளைத் தொற்றியிருந்தது. சில தினங்களுக்குள் நடந்த கொடூர சம்பவம் அவள் மனதை குடைந்து கொண்டிருந்தன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கல்லாக்கிக் கொண்டிருந்தன. அப்போது ஜோசப் உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் உள்ளே துனைக்கு இருந்த இரண்டு பெண்கள் வெளியே சென்றனர். ஜோசப் அந்தக் குழந்தையைப் பார்த்தார். அது பாதி உறக்கத்திலிருந்தது. மௌனத்தை முதலில் அந்தப் பெண் கலைத்தாள்.
ரொம்ப நன்றி பாதர்"
நீ யாருமா?”
என் குழந்தைக்காக முதல ஒரு ஜபம் பண்ணுங்க பாதர்"
ஜோசப் அந்தக் குழந்தையின் மேல் பைபிளை வைந்து ஜபிக்க ஆரம்பித்தார்.

இன்று

பிரார்த்தனை முடிந்து கூட்டம் கலைய ஆரம்பித்த பின்புதான் ஸ்ரீதர் மணியைப் பார்த்தான். அந்த டைரியிலேயே அவன் தங்குவதற்கான இடத்தையும் ஜோசப் குறிப்பிட்டிருந்தார். மைதானத்திலிருந்து நடந்தே ஸ்ரீதர் அந்த இடத்தை அடைந்தான். அந்த வீட்டின் கதவை தட்டினான். நள்ளிரவிலும் உடனே கதவு திறக்கப் பட்டது. ஒரு வயதானவரோடு சேர்ந்து அந்த வீடு அவனை உள்வாங்கிக் கொண்டது.
உள்ளே அவனிடம் ஒரு கடிதம் தரப் பட்டது. மீண்டும் ஜோசப்.

கமிஷனர் அலுவலகம் அதிகாலை 4 மணி

தரண் அந்த பைகள்களைப் பற்றி விவாதித்து விட்டு வெளியே வந்த போது காக்கிச் சட்டையில் ஒருவனை விசாரணைக்காக அழைத்து வந்திருந்தனர்.
யார் இது?”
பஸ் டெப்போல திருட பாத்திருக்கான்" என்று கண்ணன் பதிலளித்தான்.
தரண் அவனை அருகில் அழைத்தான்.
திருட புகுந்தது சரி, டிரஸ் எப்படி அதே கலர்ல"
அவன் விழிக்க ஆரம்பித்தான். மாட்டி கொள்வோம் என்ற எண்ணம் அவனை யோசிக்க விடாமல் தடுத்தது.
என்ன வேலை செய்யற"
சட்டென சுதாரித்துக் கொண்ட அவன் "வாட்ச்மேன் சார்"
வேலதான் இருக்கில்ல அப்புறம் ஏண்டா திருடுறே"
வாங்கற தெல்லாம் வீட்டுக்கே போயிடுது சார், குடிக்க...” அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு அறை அவன் முகத்தில் விழுந்தது. தரண் வேகமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.
போய் உக்கார்ரா?” என கண்ணன் அவனைப் பணித்து விட்டு தரணின் அறைக்கு வேகமாக சென்றான்.

ஜோசப் நண்பரின் வீடு

              “நீ அந்த டைரியை முழுதாகப் படித்திருப்பாய் என் நம்புகிறேன். அப்படியானால் நீ செய்ய வேண்டியவை உனக்கே புரியும். இல்லையென்றால் உன் மாற்றம் இன்றிலிருந்து துவங்க வேண்டும். உன் அம்மா அவருடைய அறிவையும், இந்திய வளத்தையும் பயன்படுத்தி பல கோடிகள் செலவாகும் ஒரு விஷயத்தை, இரண்டாண்டுளில் கண்டறிந்து, அதை செயல் படுத்தும் விதத்தையும் எளிமையாக்கிவுள்ளார். டைரியை படித்து முடித்தப் பின் இது உனக்கு விளங்கும். இப்போது என் நண்பர் தரும் மருந்தை மட்டும் எடுத்துக் கொண்டு உறங்கு"
ஸ்ரீதர் என்ன நடக்கிறது என கிரக்கதற்குள் அந்த முதியவர் அவன் முன் ஒரு மருந்துடன் நின்றார்.
கமிஷனர் அலுவலகம்

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து தரணிடம் கண்ணன் அவசரமாக வந்தான்.
இன்னும் ரெண்டு பேர வேற வேற டெப்போல இருந்து அரஸ்ட் பண்ணியிருக்காங்க அவங்க எல்லார்கிட்டயும் அங்க வேல செஞ்சங்களோட ஐ டி கார்ட் இருந்திருக்கு. இதுவரைக்கும் டெப்போல வேலை செஞ்ச நாலு பேரக் கானோம்"
தரண் சிந்திக்கத் துவங்கினான்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட எத்தன பேரு பாவநகர பஸ்ல போவாங்க"
லட்சக்கண்க்குள, பாம் எதாவது"
இல்ல, லட்சக் கணக்கான ஜனங்க ஒரு நாள் அவங்க வேலைக்கு போகலனா இந்த ஊருக்கு எவ்வளவு வருமானம் வராம போகும்"
கோடிக் கணக்குள"
பல்லாயிரம் கோடி. எத்தன பஸ் டெப்போலிருந்து வெளியே போயிருக்கும்”
நிறைய"
"எல்லா டெப்போலயும் சொல்லி தயார இருக்க சொல்லுங்க, நிறைய வேலையிருக்கு அவங்களுக்கு" தரண் தொடர்ந்தான். “இருக்குற எல்லா போலீஸ் காரங்களையும் ரெடி பண்ணுங்க"
எனக்கு புரியல"
சிம்பிள் இன்னிக்கும் நாம வீட்டுக்கு போக முடியாது” தரண் வேகமாக செயல் படத் துவங்கினான்.
                                                                                                                       -சராசரி இந்தியன்





No comments:

Post a Comment