Wednesday 21 August 2013

ரகசிய சிநேகிதனே

பூங்குழலி எங்கயிருக்க?’
சமையக்கட்டுல இருக்கேண்டா’
உடனே இங்க வா’
ஏன்?’
வான்னா வா’
வேலயா இருக்கேண்டா’
பூங்குழலி, நம்ம பாட்டு போடுறான் டி.வில’
நம்ம பாட்டா? ஆகா!’
ஆமாம். உடனே வா’
டேய் ப்ளீஸ்டா, சமைச்சு முடிச்சுட்டு வரேண்டா’
அதெல்லாம் முடியாது. இப்பவே வரனும்’
ஏண்டா இப்படி தொல்ல பன்ற?’
நான் பன்றது தொல்லயா?’
தொல்ல தான். காதல் தொல்ல, தாங்க முடியல’
வாடி, என் செல்லம்ல’
இப்பவே வரனும்னா நீ தான் மீதி சமையல் பண்ணனும், சரியா?’
பண்றேன் டீ’




அப்படியே பாதியில் சமையலை நிறுத்திவிட்டு பூங்குழலி, அருள்மொழி
உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு சென்றாள். தொலைகாட்சிப் பெட்டியில்
அலைபாயுதே’விலிருந்து ’சிநேகிதனே சிநேகிதனே’ பாடிக்கொண்டிருந்தது.


ம்ம்ம். சின்ன சின்ன அத்துமீறல் ஆரம்பி.’
கண்ண மூடு. அப்பத்தான் ஆரம்பிப்பேன்.’
சரி, மூடுட்டேன்.’


அருள்மொழி அவள் பின்னால் சென்று அவள் கைகளை பிடித்தபடி அவள் தோள் மீது தலை சாய்த்தவாறு மிகவும் மெல்லிய குரலில் அவன் நெஞ்சத்தின்று அவள் காதில் ‘ஐ லவ் யூ பூங்குழலி’ என்றான். அவளுக்கு அவர்கள் முதன் முதலில் பார்த்த போதெழுந்த அதே சிலிர்ப்பு இப்போது எழுந்தது.


அவளை திருப்பி இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்தான். மூடிய கண்களை இன்னும் இறுக்கமாய் மூடிக்கொண்டாள் பூங்குழலி. இவன் இதயத்தில் எழுந்த ‘லப்’ அவள் இதயத்தில் ‘டப்’ என்று சேர்ந்துக்கொண்டது.
முத்தம் நீண்டது மணிக்கணக்காய்.


பூங்குழலியின் செல்களெல்லாம் பூக்கள் பூத்து குலுங்கியது. வெட்கத்தில் அவை சிவந்து, கதிரவன் அந்தி சாயும் அடிவானமாய் காட்சியளித்தால் பூங்குழலி. பேரழகு பதுமையாய் ஒளிவீசினாள் பூங்குழலி.


ம்ம். அடுத்து டா அருள்மொழி’
அடுத்தது என்ன? முத்தம் கொடுத்ததுல மறந்துப்போச்சு குட்டி’
எப்படித்தான் உனக்கு ஒவ்வொரு தடவையும் முத்தம் கொடுத்தோனே மறக்குமோ? இப்ப நீங்க எனக்கு நகம் வெட்டி விடனும் கண்ணு’
அப்ப போய் மெத்தையில படு’
பூங்குழலி மெத்தையில் படுத்துக்கொண்டு தூங்குவதுப் போல் நடித்தாள்.
அருள்மொழி அவளருகில் சென்று அமர்ந்து மலரின் இதழில் ஒர் இதழை மெதுவாக எடுப்பதுப்போல் அவள் கையை எடுத்து தன் ஒரு கையில் வைத்து மற்றொரு கையினால் அவள் நகத்தை களைந்தான்.
களைந்த நகத்தையெல்லாம் எடுத்து எப்போதும் அதனை சேமிக்கும் பெட்டியில் வைத்தான். பின் அவளருகில் படுத்துக்கொண்டான். அவள் அவன் மீது கை படர்த்தி நெஞ்சை முகம் புதைத்தாள். மேகம், பூமி இவர்கள் காதலில் நனைய மழை பொழிந்து மகிழ்வூட்டியது.


மெல்ல எழுந்து அவன் ஆலிவ் எண்ணெய் எடுத்து வந்தான். அவளின் மிருதுவான வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டி எழுப்பி விட்டான். அவள் மெத்தையில் கையும் காலும் நீட்டி அமர்ந்துக் கொண்டாள். அருள்மொழி அவளின் விரல்களில் ஆலிவ் எண்ணெயை பூசினான். அவள் உடல் வலிகள் அனைத்தும் பறந்துப்போயின. சுகத்தில் அவள் சொக்கிப்போனாள். அப்படியே அவளின் ஒவ்வொரு விரலுக்கும் சொடுக்கு எடுத்துவிட்டான். அவள் பூரித்துப்போனாள்.


சொர்கம் டா. உன் கூட இருக்குறது தான் எனக்கு சொர்கம். இப்பவே நான் செத்தாலும் எனக்கு முழு நிம்மதி டா.’
அடியே, அப்படி சொல்லாத. நூறு வருசம் உன் கூட வாழ்ந்து, வீடு முழுக்க குழந்தைகளா நிரம்பி, அதுகளோட குழந்தைகளுக்கு கதை சொல்லிட்டு, இப்ப போலவே எப்பவும் இருந்து நாம சாகனும்’
விழிகளில் நீர் வழிந்தது அவளுக்கு. துடைத்திட்ட இவன் கைகளை எடுத்து நெஞ்சோடு சேர்த்து சாய்ந்துக் கொண்டாள்.


சரிடா. அடுத்து என்ன?’
தெரியலடி’
டேய், சொன்னதெல்லாம் புரிஞ்சாச்சு, இப்ப சொல்லாத புரியனும். சொல்லாத இரவுல புரியலாம். இப்ப காதுல கூந்தல நுழைக்கப் போறேனே’
வேணாம் பூங்குழலி, வேணாம்’
உக்காருடா மடையா. கைகளால் காதைப் பொத்தி உட்கார்ந்தான். அவள் விட்ட உதையில் கைகளை விடுத்து பல்லை கடித்துக் கொண்டு உட்கார்ந்தான். அவள் தன் கூந்தலை அவன் காதினில் நுழைத்து இம்சித்தாள்.
பொறுத்து பொறுத்து பார்த்து தாங்கமுடியாமல் கத்திக்கொண்டே ஓடினான். அவள் பின்னால் துரத்திக்கொண்டே ஓடினாள்.


அவன் ஓடி குளியறையில் ஒளிந்துக் கொண்டான். அவள் அவனுக்கு பிடித்த நீல நிற சட்டையும் வெள்ளை பேண்ட்டும் போட்டுக்கொண்டு குளியறையின் வெளியிலிருந்து அவனை அழைத்தாள்.
டேய், கதவ திற’
மாட்டேன்’
இப்ப திறக்கப் போறியா இல்லாயா?’
போ, நான் மாட்டேன்’
திறக்க மாட்டதானே. அடுத்த தடவ பாட்டு போட்டா…’
சரி திறக்கறேன்’
அவன் சவரில் தலை நனைத்துக் கொண்டிருந்தான். இவள் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள். தோளிலும் மார்பிலும் கடித்தாள். தரையில் அவனை தள்ளிவிட்டு காலால் உதைத்து தள்ளினாள். அவன் வலியில் ஐயோ அம்மா என்று அலறினான். ஓய்ந்து முடித்தவள் அவனை அள்ளி உப்புமூட்டை தூக்கிக்கொண்டு வெளியே இறக்கி விட்டாள். அவன் அவளின் கூந்தலை துவட்டிவிட்டான்.
உன்னயெல்லாம் என் கைகுட்டையில மடிக்க முடியாது. சேலையில தான் சுத்தனும்.
அவனுக்கு பிடித்த மஞ்சள் நிற சேலையில் அவனை சுற்றி கட்டிலில் தள்ளிவிட்டாள். அவளும் அவன் மீது விழுந்தாள். அவன் வலியில் கத்தினான்.


அருள்மொழி, எனக்கு ஒரு வரம் வேணும்’
கேளுடி. என்ன வேணும்’
டேய் கணவா, இப்ப போலவே என்ன எப்பவும் பாத்துக்கோடா. நீ இல்லாத ஒரு நொடி கூட என்னால யோசிச்சு பாக்க முடியல. நான் சுயநலவாதினு நினைகாத, உனக்கு முன்னாடி நான் போய் சேரனும். அது மட்டும் தான் நான் உனக்கு தர ஒரே கஷ்டமா இருக்கனும். சொர்கமோ நரகமோ நான் அங்க போரத்துகுள்ள நீ எனக்கு முன்னாடி அங்க நிக்கனும். உன்ன விட்டு என்னால எங்கயும் இருக்க முடியாது டா.’
ச்சீ போடி. உன் குட இங்கவே இருக்க முடியல. இந்த அடி அடிக்கிற. அங்க வந்தும் என்னால வாங்க முடியாதுப்பா.’
அப்படியா. அப்ப அதுக்கும் சேத்து இப்பவே தரேன்’
போதும், இதோட நிறுத்திக்கோ. அப்புறம் அழுதுறுவேன். ஆமாம் அழுதுறுவேன்.’


அவளின் கண் பார்த்து சொன்னான்,
இந்த ஒரு வாழ்கை மட்டும் இல்ல, என்னுடைய எல்லா வாழ்க்கையுலும் நீ தான் எனக்கு பொண்டாட்டி, நான் தான் உனக்கு புருஷன். உன்னோட சுகம், துக்கம், கஷ்டம், இஷ்டம், இன்பம், துன்பம் எல்லாத்துலயும் நான் உன்கூடவே இருப்பேன். இது நம்ம விதி பூங்குழலி!’


காதல் அங்கு நிறைந்து இருந்தது.


அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது.
யாருனு நான் பாக்றேன். நீ சமைக்க போ. நான் பின்னாடியே வரேன்’
சரிடா. நீ சேலைய கழட்டிட்டு வேற மாத்திட்டு போ’


இவன் போய் கதவை திறந்தான். இவனின் அம்மா வெளியே நின்றாள்.
என்னடா இவ்வளவு நேரமா கதவ திறக்காம என்ன பண்ணிக்கிட்டு இருந்த?’
இவன் ஏதும் பேசாமல் கட்டிலில் அமர்ந்துக் கொண்டான். டி.வி பார்ப்பதை தொடர்ந்தான்.
அம்மா சமையலறையை கடந்து சென்றாள். குளியறையில் சவரில் இருந்து தண்ணீர் வழிந்தோடியது. அப்படியே அதனை நிறுத்திவிட்டு படுக்கையறைக்கு சென்றாள். அங்கே ஆலிவ் எண்ணெய் கீழே கொட்டி கிடந்தது.


அம்மா அழுதுக்கொண்டே அவனை நோக்கி பதறி வந்தாள்.
மவனே, ஏண்டா இன்னமும் பைத்தியகாரத்தனமா நடந்துட்டு இருக்க?
இல்லமா. டி.வில அந்த பாட்டு போட்டாங்களா, அதான் நானும் பூங்குழலியும் அப்படியே பண்ண ஆரம்பிச்சுட்டோம். பூங்குழலி! பூங்குழலி! அம்மா கூப்பிடறாங்க. இங்க வா. அவ சமைச்சுட்டு இருக்கா. அவகிட்ட வேணும்னா கேளுங்க.’
அவ உள்ள இருக்காளா? வந்து பாருடா. அவ இருக்காளா? டேய் அருள்மொழி, அவ உன்ன விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிகிட்டா டா. அவ இங்க இல்லடா’
மா, பொய் சொல்லாத. பூங்குழலி இங்க வா. அம்மா என்ன ஏமாத்த பாக்குறாங்க. வந்து அம்மாகிட்ட நீ இங்க தான் இருக்கேனு சொல்லு’
இன்னும் எத்தன நாளைக்கு அவ இங்க இருக்குற மாறி கற்பனையில நினைச்சுட்டு வாழப் போறியோ. எப்பத்தான் நான் என் பழைய அருள்மொழிய பாக்கப்போறேனோ’ என்று மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டாள் அம்மா.


அம்மா, பூங்குழலி உன்கிட்ட பேசிட்டு இருக்கா நீ பதில் சொல்லாம ஏன் அழுதுட்டு இருக்க. பாரு நீ அழறத பாத்து எப்படி துடிக்கிறா பாரு அவ’
ம்மா, அழாதமா. அவ உன்னயும் என்னயும் நல்லா பாத்துப்பா’


மீண்டும் கதவின் சத்தம் கேட்டது. கதவை திறந்துக்கொண்டு குமுதாவும் மூர்த்தியும் உள்ளே நுழைந்தார்கள்.


ஏங்க, ரோட்ல எட்டாம் ஆண்டு அஞ்சலினு போஸ்டர் ஒட்டியிருந்தாங்களே அத பாத்திங்களா?’
இல்ல, ஏன்?’
ஒரு அம்மாவும் புள்ளையும் ஒரே நாள்ல செத்துட்டாங்களாம். அந்த பையன் ஒரு பொண்ண காதலிச்சுருக்கான். அந்த பொண்ணு வீட்ல ஒத்துக்கல. இவன் அந்த பொண்னு நினைப்பிலேயே பைத்தியமா ஆகிட்டான். அவ இருக்குற மாறி நினைச்சுட்டு தானா பேசுவானாம், ஆடுவானாம். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவன் தூக்கு மாட்டி செத்துட்டானாம். அந்த அம்மாவும் அவன புடிச்சுகிட்டே செத்துட்டாங்களாம்.’
அட பாவமே. என்னா பசங்க இவங்க? காதல் தோத்தா தற்கொலையா பண்ணறது. எவ்வளவு இருக்கு வாழ்க்கை. ச்சே. இவன மாறி பசங்கள நினைச்சாவே கோவம் தான் வருது’


ஏங்க வெளிய போறத்துக்கு முன்னாடி பாத்ரூம்க்கு நீங்க தானே போனீங்க?’
ஆமாம். பாத்ரூம் போக கூடாதா?’
போங்க. அதுக்கு யாரு என்ன சொல்ல போறா? போனா வரும் போது சவர நிறுத்திட்டு வரனும். பாருங்க எவ்வளவு தண்ணி வீணா போயிருக்கு.’
இல்லடி, நான் நிறுத்திட்டு தானே வந்தேன். எப்படி மறந்தேன்? ம்ம்ம்’
யே, நீ மட்டும் என்னவாம். இங்க பாரு பெட்ரூம்ல இப்படி. ஏண்டி ஆலிவ் எண்ணெய எடுத்தா ஒழுங்க வைக்க தெரியாதா? பாரு கீழ எப்படி கொட்டிகிடக்கனு’
இல்லங்க, நான் சரியா மூடி தானே வச்சேன். ஒரு வேல மறந்திருப்பேங்க’


ஒரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டேன்’
என்ன? வேற என்ன கொட்டி வச்சிருக்க?’
இல்ல, அந்த அம்மாவும் புள்ளையும் இந்த வீட்ல தான் செத்தாங்களாம். நான் என்ன இருந்தாலும் பரவாயில்ல. எங்களுக்கு அதுலயெல்லாம் நம்பிக்கையில்லனு சொல்லிட்டேன்’
டி.வியை போட்டார் மூர்த்தி. அதில் ‘சிநேகிதனே சிநேகிதனே’ பாடல்.
ஏங்க இந்த பாத்ரூம் சவர்ல ஏதோ கோளாறு போல, அதுவா திறந்துக்குது.
இங்க வந்து பாருங்களேன்’



ஏன் செத்த பின்னாடி காதல் தொடர கூடாதா?
                           -கோழி       

1 comment:

  1. made me to scroll fast to know the climax..good formation of words கார்த்தி

    ReplyDelete