Wednesday 12 December 2012

சிமிட்டல்கள்



பாரி ஆனான்

எச்சில் சோற்றைக் கூட
தானம் தர மறுப்பவன்
பாரி ஆனான் அன்று
பிச்சைக்காரனுக்கு தானம் தந்து
இரயில் நிலையத்தில் சில்லரை கேட்டதால்………


தட்டச்சு….

அனுதினமும் நான் குட்டப் படுகின்றேன்
உன் கவிதைகள் அழகாய் ம் வர
வேதனையுடன் தட்டச்சு….

கோவிலுக்கு வெளியே கடவுள்

தினம் தினம் கடவுளை காண்கிறான்
கருவரைக்கு கூட செல்லாமல்
தனக்கு பிச்சை இட்டவர்களின் முகம் கொண்டு….

கண்ணாடி பிம்பம்

தினம் தினம் அவள் கண்ணாடி முன் நிற்கின்றாள்
ஏன் அவளுக்கு தெரியவில்லை
அவள் பிம்பமாய் நான் இருப்பது


ரமேஷ் குமார் பாலன்







நம்பிக்கை

தோல்வியால் துவண்ட மனிதனை பார்த்து சிரித்தது,
எத்தனை முறை கிளை உடைக்கப்பட்டாலும்
துளிர் விட்ட மரம்….!                                          

தீரா தாகம்

எத்தனை முறை வாங்கினாலும்,
தீரா தாகம்...
எதிர் வீட்டு குழந்தையின் எச்சில் முத்தம்!


                                                                                  பிரியங்கா

No comments:

Post a Comment