Saturday 16 March 2013

இப்படியே காத்திரு…..!

























தெளிந்த நீரோடையாய்
முகம்  இருக்க
நெற்றிச் சுருக்கங்களோ
இவ்விடம் நானில்லை
என்பதை
இன்னலின்றி சொல்லிமுடித்தது ...

இவள் முன்னே அசையும்
நிழல் கண்டு நின்றாள்
இவள் பின்னே இவன் நிஜம்

ஆயிரம் முறை எதிர் கண்டும்
இவன் முகத்தின் வனப்பைவிட -கால்
நகங்களின் ஈர்ப்பு கொண்டே
சொக்கி நின்றாள் இவனிவள்...

யாருமறியா
அரவமில்லா இரவுகளின்
தனிமைகளில்
இவன் பெயர் சொல்லி திரியும்
கிறுக்கியாக என்றுமிவள்….

இவனின் முதலெழுத்தே
தெரியாமல்
இவள் தலையெழுத்தை-இவன்
வசம் சேர்க்கும்
தீரமும் சேர்ந்துவிட்டது…

இப்படியே காத்திருப்பாள் 
இவள்
இதழ் இசைத்து
கன்னம் சிவக்க 
வெட்கம் முளைக்கும் 
சின்னப் பார்வையிலே 
இவனுடனான  இவளுலகை
இவன் அறியும் வரை....
                                                                                - சித்ரா கா

4 comments:

  1. ஆழ்ந்து யோசித்தால் மிகவும் நுட்பமான வரிகள் - மிக அருமை

    ReplyDelete
  2. arumai chitra ..

    ReplyDelete
  3. அழகாய் இருக்கிறது சித்ரா உங்கள் வரிகள்...

    ReplyDelete
  4. சிறப்பான வரிகள்...

    ReplyDelete