Saturday 16 March 2013

துட்டு வேணும் தம்பி



உனக்காக நான் படும் பாட்டைத்தான்
இங்கே எல்லோரும் படுகிறார்கள்.
காலத்தைக்கூட வென்றுவிடலாம் போல
உன்னை வெல்ல முடியவில்லையே....
விதியைக்கூட மாற்றிவிடலாம் போல
உன்னை மாற்ற முடியவில்லையே....
நல்ல உறவுகளைப் பிரிக்கிறாய்
நல்ல நினைவுகளை அழிக்கிறாய்
பத்தல்ல பத்தாயிரம் செய்கிறாய்
பாதாலமல்ல பரலோகமே பாய்கிறாய்
தவழ நீ தேவை
வளரவும் நீ தேவை
படிக்க நீ தேவை
பழகவும் நீ தேவை
மணக்க நீ தேவை
மதிக்கவும் நீ தேவை
பிறக்க நீ...
பிழைக்க நீ...
புதைக்கவும் நீ தேவைப்படுகிறாய்
உன்னை மிதிப்பவர்களை
நீ மதிக்கிறாய்
உன்னை மதிப்பவர்களை
நீ மிதிக்கிறாய்
நியாபகம் இருக்கட்டும்
வயிற்றில் பசி உள்ளவரை மட்டுமே
இம்மண்ணில் நீ
தெய்வமென பிழைத்து கிடப்பாய்
                                     
                                 - விஜய் Che

8 comments:

  1. நியாபகம் இருக்கட்டும்
    வயிற்றில் பசி உள்ளவரை மட்டுமே
    இம்மண்ணில் நீ
    தெய்வமென பிழைத்து கிடப்பாய்
    super lines ..

    ReplyDelete
  2. பணம் இல்லாமலே இருந்திருக்கலாம், பல பிரச்சனை இருந்திருக்காது. நல்ல வரிகள் தோழா

    ReplyDelete
  3. பசிக்காத வயிறுடன் எங்களை படைத்தால்...
    கடவுளே....!
    நீ மீண்டும் கடவுளாவாய்...!

    அப்படித்தான விஜய்..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Aam inba....Sariyaana vilakkam

      Delete