Sunday 24 March 2013

கவிதை நடையில் நடக்கிறாய் - புத்தக மதிப்புரை



கவிஞர் குகை மா. புகழேந்தியின் “கவிதை நடையில் நடக்கிறாய்” என்ற புத்தகம் சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் வாங்கினேன்.  
காதலை அவர் காதலித்த விதமும் இடமும் என்னை எதோ செய்துவிட்டது. ஆகவே அவருடன் கைகுலுக்கும் விதமாக அவர் தீட்டிய சில காதல் ஓவியங்களை இங்கே சமர்பிக்கிறேன்.

v        அப்படியெல்லாம் உற்றுப் பார்க்காதே
பைத்தியமாகிவிட ஆசை வருகிறது

ஒரு சிறு பார்வை கவிஞரை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்


v       பார்க்கின்ற பெண்ணெல்லாம்
அழகாகத் தெரிந்த காலத்தை
உன்னைக் கடந்த போதுதான் கடந்தேன்

ஒரு காதலின் அழிவு உறுதி படுத்தபட்டால் பிறகு காணும் கண்ணெல்லாம் அழகாய்த்தான் இருக்குமோ


v       பூக்காரனின் கூடையிலிருந்து
தேடித் தேடி மிகச் சரியாக கண்டுபிடித்துவிடுகிறாய்
உனக்கென மலர்ந்த பூக்களை

அவள் தலையில் இருந்து உதிர்ந்த பூக்களை என்னவென்று சொல்வது...


உன்னோடு பேசிவிட்டுத் திரும்பும்போதெல்லாம்
பூக்களோடு பேசிவிட்டு வரும் காற்றென மணம்
வீசிக்கொண்டு அலைகிறேன்

v       நீ பேசும் போதெல்லாம் வார்த்தைகளின் மேடைகளில்
இதழ்களின் நாட்டியம்

பேசிவிட்டு போவது இருக்கட்டும்...சிலர் பார்த்துவிட்டு போனாலே மணம் வீசிக்கொண்டு தான் திரிகிறார்கள்


எனக்கு நீயும் உனக்கு நானும் சவப்பெட்டிகள்

அன்பின் உச்ச கட்ட வெளிப்பாடு


உன்னை நினைக்கும்போதெல்லாம்
கவிதை வந்துவிடுகிறது. உன் நினைவுகளைத்
தடங்கல் செய்கிற இந்தக் கவிதைகளை
எனக்கு பிடிக்கவில்லை

கவிதைகள் எல்லாம் அவளே இருக்கும் போது எப்படி தடங்கல் ஆகும்


தவிர்க்க முடியாத பிரிவில்
நீ காலி செய்து விட்டுப்போன வாடகை வீட்டில்
குடிபெயர்ந்து நீ வாழ்ந்துவிட்டுப்போன
நாட்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

காதலுக்கே உரிய உயரிய சிந்தனை.... ஒரு சிலருக்கே வாய்க்கும் இந்த அதிர்ஷ்டம்


தினம் தினம் கொஞ்சமாய்
திருடித் திருடி உன்னை சேமிக்கிறேன்
குறைந்து போவது தெரியாமலே
நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய்

சொன்ன காதல் இப்படி; சொல்லாத காதல் எப்படியோ


யாருக்கும் கொடுத்துவிடாதே
உன் வரங்கள் மட்டுமல்ல
சாபங்களும் எனக்குரியதே

v        உன்னைக் காதலிக்கத் துவங்கியதிலிருந்து
சீக்கிரமாகவே விழித்துக்கொள்கிறேன்
ஆனால் தாமதமாகக் கூட தூங்க முடியவில்லை

v       காதலித்தால் நேரம் போவதே தெரிவதில்லை என்கிறாய்
உயிர் போனால் மட்டும் தெரியவா போகிறது

சொர்க்கமென்பதும் நீ தானோ!!! நரகமென்பதும் நீ தானோ!!!


உன் கரம் பற்றியபோது
இரண்டு வளையல்கள் உடைந்து போயின
அப்போதுதான் கற்றுக்கொண்டேன்
உன்னை எப்படித் தொடவேண்டுமென்று

காதல் எவ்வளவு மென்மையானது என்பது இந்த வரிகளில் ஆழமாய்த் தெரிகிறது


 விக்கல் நின்றபோது நீ தூங்கிவிட்டாயென
நம்பிக்கொண்டு நானும் தூங்கிப் போனேன்
பிறகு கனவில் விக்கிக் கொண்டிருந்தேன்

v       ஒரேயொருமுறை உன்னைப் பார்தேன்
மறுபடியும் பார்க்கவேண்டும் போலிருந்தது
பார்த்துக்கொண்டே இருந்தேன். மற்றபடி
நான் பார்த்தபோதெல்லாம் நீ எதிரில்தான் இருந்தாய்
என்பதை என்னால் நிச்சயித்துச் சொல்ல முடியாது

காதல் படும்பாடா!!! இல்லை காதல் படுத்தும்பாடா!!!


காதலைச் சொல்லவந்த
எல்லா கடிதங்களுமே வாய் திறந்த போது
நாக்குகள் இல்லை

கொடுக்கப்படும் கடிதங்கள் மட்டுமே பிரிக்கப்படுகின்றன


எனக்கும் காதலுக்கும் வெகு தூரமென்றிருந்தேன்
எதிர் வீடுதான் என்பதறியாமல்

இருப்பவனுக்கு ஒரு வீடு!!! இல்லாதவனுக்கு.........


வழக்கமாய் நீ வந்து போகின்ற நேரத்திலே
நின்று கொண்டிருக்கிறது எனது காலம்

காதலித்தால் கைக் கடிகாரம் தேவைப்படாது போல
       

ஒரு துளி மழையில் இருவரும் நனைய காதல்
வந்த பிறகுதான் கற்றுக்கொண்டோம்

காதலித்தால் செலவு இழுத்து விடும் என்று கேள்விபட்டிருக்கிறேன். இங்கோ வித்தியாசமான எக்னொமிகல் லவ்


அட நீ பூமியில் தான் இருக்கிறாய்

எத்தனை அர்த்தங்கள் பொதிந்த மிகச் சிறிய வரி...


இது போன்று நிறைய காதல் சாறுகள் இந்த புத்தகத்தில் இனிக்கின்றன.
நான் ரசித்த வரிகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன். மேலும் இது போன்ற இனிப்பான காதல் சாறுகளுக்கு புரட்டவும் "கவிதை நடையில் நடக்கிறாய்"


                                                                                                                                                                    தொகுப்பு

                                                                                                                                                                   விஜய் CHE

2 comments:

  1. காதலை கொண்டாடியிருக்கிறார் நண்பா.... காதல் அவ்வளவு அழகா? உங்கள் மதிப்புரை மனதை காதலால் வருடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தீபன்

      Delete