Pages
- விஜய்
- தீபன்
- யோகி
- கண்ணம்மா
- ஜெய கீதா
- மாலினி
- சராசரி இந்தியன்
- இன்பா
- சித்ரா
- சிந்துஜா
- ரமேஷ்குமார் பாலன்
- பிரியங்கா
- தோழர் யுவராஜ்
- தீபக் விமல்
- Kalyan
- அமுத இளவரசி
- வினோதன்
- சின்னப்பையன்
- கோழி
- முருகன்
- பாவ நகரம்
- குறள் மழை
- இந்திய வரலாறு
- லட்சங்களில் ஒருவன்
- புத்தக மதிப்புரை
- திரைப் பார்வை
- கலாச்சாரக் கேள்விகள்
- என்ன வேணுனாலும் பேசலாம்
- காதல் காலங்கள் - தொடர் கதை
- துளித் துளியாய்
- சிமிட்டல்கள்
- மதிவதனி
- புகைப்படங்கள்
- சௌமி
- அபிலேஷ்
- சாகுல்
- அடைமழை
Tuesday 19 March 2013
பேசிவிடு...!
"மௌனம்".
உனக்கு "தற்காப்பு".
எனக்கு "தண்டனை".
பேசிவிடு...!
மொழிபெயர்த்து மட்டுமல்ல,
முகம் பார்த்தும் கூட
புரியவில்லை
உன் மௌனம்.
பேசிவிடு..!
மௌனம் போதும்,
மோதிப்பார்த்து விடலாம்
மொழிகளால்
பேசிவிடு ...!
எங்கு கற்றுக்கொண்டாய் இந்த பாஷையை
மற்றவர்க்கு "இதமாய்."
எனக்கு மட்டும் "ரணமாய்."
பேசிவிடு...!
அப்பப்பா...
எத்தனை சொற்கள்
உன் மௌனத்திலும் கூட.
அதை வரிசை படுத்தவேணும்
பேசிவிடு...!
மௌனம் அழகு தான்.
ஆனாலும்
நீ கொடுமைக்கார அழகி.
பேசிவிடு...!
நீ மௌன போர்க்களம்
புகந்த பொக்கிஷம்.
நான்
போர்தொடுக்கவா..?
பிரமிக்கவா ..?
பேசிவிடு...!
என்னை சத்தமில்லாமல்
உடைத்தெறிந்த
ஊமை நீ
ஊனமாய் நான்.
--Yuvaraj
Labels:
கவிதைகள்,
தோழர் யுவராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Nanbare, Miga miga arumayaana padaippu kurippaka keel sonna varikal....
ReplyDeleteஎன்னை சத்தமில்லாமல்
உடைத்தெறிந்த
ஊமை நீ
ஊனமாய் நான்.
நான் வாசித்த சிறந்த கவிதைகளில் இதற்கு ஒரு இடம் உண்டு. மிக அற்புதம், அதிசியம்.......
ReplyDeleteமிக அருமையான கவிதை... வாழ்த்துக்கள் யுவராஜ்....
ReplyDelete