Saturday 16 March 2013

தேவை ஒரு துணை

என் தீராத எண்ணங்களுக்கு ஓர் முடிவே கிடையாது.
கேட்பாரற்று கிடக்கும் ஆலமரத்து சருகைப்போல
அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருக்கும்.
மழை நாளில் ஏதோவொரு குழப்பத்தை மனதில் நிறுத்திக்கொண்டு
வாய் பேசாமல் நனைந்திருக்கும்.
எண்ணில் அடங்காத ஆசைகளை சுமந்தபடி சுற்றித்திரியும் மனது
யாரும் சொல்லாமலே ஆசைகளை தூக்கி வீசிவிடுகிறது.
ஆசையோ சோகமோ அவற்றை ஊறவைத்து அசைபோட
ஓர் துணை தேவைபடுகிறது.
துணை கிடைத்தவன் பாக்கியசாலி,
நான் இந்த கவிதைக்கு சொந்தக்காரன்.

                                                                                                             -தீபன்

3 comments:

  1. நான் இந்த கவிதைக்கு சொந்தக்காரன் - எத்தனை நாட்களுக்கு நண்பா :)

    ReplyDelete
    Replies
    1. காலம் பதில் சொல்ல வேண்டும்.

      Delete
  2. தீபன்... நீங்கள் விரைவில் பாக்கியசாலி ஆகிவிடுவீர்கள்...

    ReplyDelete