Monday 18 March 2013

மழை முத்தம்...



நீ ரசிக்காத
மழை
மட்டும் தான்
பூமியில்
மற்றவை
உன்னிலும் என்னிலும்
அறிவாய் இதை நீ..!
நம் முத்தத்தை
ரசித்த
மழைத்துளியின் இனிப்பு
இன்னமும்
எனக்கு
திகட்டவில்லை ..!
மழை வரும்
முன் தானே மயில் தோகை
விரிக்கும்
நீ ஏன்
மழை வந்த பின்
தாவணியில்
தலைமறைக்கிறாய்…?
என்று
நீ
குடை பிடிக்க
கற்றுக்கொண்டாயோ
அன்று தொடங்கியது
மழைக்கான பயம்.

நீ நனைந்த
பின்
மழை
இன்னும் அழகாய்…!
அது எப்படி
அட்டூழிய
அழகி நீயே சொல்.

நீ…!
மழை…!
எதற்கு முதல் முத்தம்…?
தெரியவில்லை எனக்கு
எதற்கும்
தயாராய் இருக்கட்டும்
உன் உதடுகள்..!

மழை ரசிக்கும்
அதிசிய வானவில் நீ...

குடை பிடிக்க
தெரிந்த குளிர் காற்று நீ…

காத்திருக்க தெரிந்த
காதல் நீ…

உன்னை பிரமிக்கும்
நான்.
போதும் எனக்கு…!

-Yuvaraj

4 comments:

  1. அடஅடடா பிரமாதம்... மழையா அவளா... இரண்டுமே அழகு...

    ReplyDelete
  2. என்று
    நீ
    குடை பிடிக்க
    கற்றுக்கொண்டாயோ
    அன்று தொடங்கியது
    மழைக்கான பயம்.
    Adadaaaa:)

    ReplyDelete
  3. குடை பிடிக்க
    தெரிந்த குளிர் காற்று நீ…..... Arumaiyaana varikal....

    ReplyDelete
  4. நீங்கள் ஏன் தோழரே குழப்பத்தில் நின்றீர்...? மழை முந்திக் கொண்டது உங்கள் அழகியை முத்தமிட...
    அழகான பிடித்தமான வரிகளை சொல்லவேண்டுமென்றால், நான் முழுக்கவிதையையும் சொல்ல வேண்டி இருக்கும்..

    ReplyDelete