Sunday 7 July 2013

சந்தோசத்தின் சாகா நிமிடங்கள்...


தேயாத வெண்ணிலவை
கேட்டேன்
தேய்ந்து வளரும்
விண்ணிலவைக் கண்டு
வினவ  வைத்தது
வாழ்க்கை

மாறா மணமும்
தீரா கணமும்
நொடிக்கு நொடி
நிறைந்து வழிய
நிந்தித்தேன்
தேறிய மனங்களையும்
கூரிய குணங்களையும்
கண்டு
வியந்து நின்றன விழிகள்

கவலைகளை ,
கண்ணீரினால்
கழுவிய விழிகள்
காலங்கள் கடக்க
புன்னகையினால் ,
பூசி முழுகப்
பழகிக் கொண்டன

பாதையெங்கும் பூக்களையும்
தேதியெங்கும் தீஞ்சுவையையும்
நாடி நின்ற வேளைகளில்
தேடலையும் , தன்னம்பிக்கையையும்
சுமந்து நின்ற முகங்கள்
தன்னிலை அறியச் செய்தன

இன்பங்களைத் தேடி
எட்டு திசைகளிலும்
ஓடித் தேய்ந்த
கால்கள் ,
ஓய்ந்த பின்னரே
உணர்ந்து கொண்டன,
உயிர் துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஞாலத்தில் நிறையா இன்பங்கள்
நாடி வருமென்று ..

3 comments:

  1. கவலைகளை ,
    கண்ணீரினால்
    கழுவிய விழிகள்
    காலங்கள் கடக்க
    புன்னகையினால் ,
    பூசி முழுகப்
    பழகிக் கொண்டன

    Fantastic lines.....Kannamma

    ReplyDelete
  2. வித்தியாசமான கோணம்... சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கவலைகளை ,
    கண்ணீரினால்
    கழுவிய விழிகள்
    காலங்கள் கடக்க
    புன்னகையினால் ,
    பூசி முழுகப்
    பழகிக் கொண்டன

    awesome lines :)

    ReplyDelete