Saturday 20 July 2013

என் நட்பே!!!!!






ஏதோ ஒரு உணர்வு சட்டென்று திரும்ப சொன்னது
நட்பென்ற சொல்லை எனக்கு புரியவைத்தவள் அதோ…..

நமக்கிடையில் யாரும் இல்லை என்று
ஒரு திமிருடன் நாம் இருந்த நாட்கள் நினைவுகளில்!!!!!
15 வருட நட்பையும் அந்த நட்பு தந்த திமிரையும்
இந்த சில வருட corporate  வாழ்க்கை பிரித்துவிட்டது!!!!!
ஒவ்வொரு நாளும் திருவிழாவாய் இருந்த காலம் மறைந்து
இன்று திருவிழா என்ற சொல்லே மறந்து போனது!!!!!

பெற்றோரிடம் திட்டும் உதையும் வாங்கி
ஒன்றாய் இருவரும் மழையில் நனைந்த நாட்கள் நினைவுகளில்!!!!!
இன்று மழையில் நனையாதே என்று மிரட்ட யாரும் இல்லை
ஏன்?????
மழையை ரசிக்கவே நேரம் இல்லை…..

மாறிப்போன இந்த எந்திர வாழ்வில்,
எந்திரங்களோடு எந்திரமாய் மாறி,
என் இதழும் புன்னகையை மறந்தது!!!!!
என் இரவுகளும் தூக்கத்தை தொலைத்தது!!!!!

ஏதோ ஒரு தேடலை நோக்கியே இருவரும் வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்தோம்!!!!!
ஆனால் இன்று…………………………..
அந்த தேடலே மறந்து போனது…..

உன்னை அணைக்க துடிக்கிறது கைகள்
அடுத்த அடி எடுத்து வைக்க மறந்து போனது கால்கள்!!!!!
கண்ணீரின் சுவை அதை வெகு நாட்களுக்கு பின் உணர்கிறேன் தோழி……

ஒன்றாய் இருவரும் ஆ போட பழகியது முதல்
எத்தனை எத்தனை நினைவுகள்!!!!!
என்றுமே…… நினைவுகளை அசைபோடுவது சுகம் தான்
ஆனால் ஏனோ?????

முதல் முறையாய் உன் நினைவுகளும் என்னுள் ரணமாய்........

1 comment:

  1. நெகிழ்ச்சியான வரிகள் தோழி

    பெற்றோரிடம் திட்டும் உதையும் வாங்கி
    ஒன்றாய் இருவரும் மழையில் நனைந்த நாட்கள் நினைவுகளில்!!!!!
    இன்று மழையில் நனையாதே என்று மிரட்ட யாரும் இல்லை
    ஏன்?????
    மழையை ரசிக்கவே நேரம் இல்லை…..

    ReplyDelete