Sunday 7 July 2013

சந்தோசத்தின் சாகா நிமிடங்கள்...



கேட்டது கிடைத்து
பிறகது நழுவும்போது

இழந்தது தேடி
பிறகது மீட்கும் போது

நினைத்தது கடந்து
பிறகது நடக்கும் போது

செழித்தது வரண்டு
பிறகது கொடுக்கும் போது

பார்த்தது பிடித்து
பிறகது வெறுக்கும் போது

புரிந்தது பிரிந்து
பிறகது சேரும் போது

இப்படியாய்
சரிவிகித நிமிடங்கள்
சுகமும் துக்கமும்
பங்கிடுகின்றன

கால அளவுகள்
ஒன்றே எனினும்
இரவு சீக்கிரம் முடிகிறது
பகல் சீக்கிரம் முடிவதில்லை

விழித்திருப்பவனின்
இரவும், பகலும்
நீண்டு கிடக்கிறது
இங்கே...

இரவு தூங்கி மறக்கபடுவதாலே
பகல் விழித்து நீள்கிறது...

துக்கம் மறக்கப்படின் சுகமும்....  
சுகம் மறக்கப்படின் துக்கமும்
நிலைத்து கிடந்திடும்… 

No comments:

Post a Comment