Saturday 5 October 2013

என் தமிழனின் பெயர் !!!



காலைக் கதிரை தட்டியெழுப்பி ,
  கழனி கற்றுத் தந்த சந்ததி....!

பிறன் பசி போக்கியே 
   தன் பசி மறந்த சமூகம்..!

இன்னமும் எட்டாத அறிவியலை ,
   அன்றே சுவடிகளில் தந்த மதி நுட்பம்...!

முயன்று தமிழ் வளர்த்து 
   முறத்தால் புலி விரட்டிய
பெண் சிங்கங்களின் வீரக்கோட்டை..!

வந்தோரை வணங்கி வாரிக்கொடுத்தே 
  வளைந்து போன மரபு..!

மாசற்ற தாய்ப் பாலாய்..
  தூசற்று ஒளிர்ந்த நாகரிகத் தோற்றம்!!

அன்று தமிழால் புவியாண்டவன் ...!
  இன்று கம்பி வேலிகளுக்குள் கைதியாக...!!

சிலம்பு விளையாடிய கைகளில் 
  விலங்கு பூட்டப்பட்ட வளையங்கள்...!

நாகரிகத்தின் முன்னோடி..
  மானம் காக்கப் போராடுகின்றான்...

கண்ணகியின் பரம்பரை...
  கற்பிழந்து நிற்கிறது...!!

அட்சயப் பாத்திரம் தந்தவன்..
  ஒட்டிய வயிறுடன் மரிக்கிறான்..!!!

ஒட்டு மொத்த தமிழனையும் ,
  அனாதையாக்கிய மாயத் தீவு,,,,!!!

தன் இனம் அழிவதை -கண்முன்னே 
  கண்டு துடிக்கும் கட்டிடப் பட்ட கைகள்...!

வான் வெளியில் கட்டப்பட்ட ,
  பறவையின் எல்லைக் கோடுகளாய்..
பேச்சுரிமையற்று வீழ்ந்து போன உதடுகள்..!

விதை கிழிதெழும் விருட்சமாய்.........
அணை உடைக்கும் காட்டாறாய்.....
அனல் கக்கும் ஆதவனாய் மாறும் வரை,,,
  
   அகிலத்தில் என் தமிழனுக்கு 
          அடிமை என்று தான் பெயர்...!!!!!

6 comments:

  1. அனைத்து தமிழர்களின் நிலைமையும் இதுதான். நம்மையும் சேர்த்து

    ReplyDelete
  2. Nilamai maarum varai poraduvom...

    ReplyDelete
  3. விதை கிழிதெழும் விருட்சமாய்.........
    அணை உடைக்கும் காட்டாறாய்.....
    அனல் கக்கும் ஆதவனாய் மாறும் வரை,,,

    அகிலத்தில் என் தமிழனுக்கு
    அடிமை என்று தான் பெயர்...!!!!!

    Inspiriting lines... keep up

    ReplyDelete