Thursday 10 October 2013

வரமா? இல்லை சாபமா?, வாழ்க்கை




மொட்டுக்குள் மகரந்தமாய்,
என் தந்தையின் சட்டைப்பைக்குள்,
நான் தவழ்ந்த காலங்களே……..

இரட்டைப் பின்னலுடன்,
என் தாய் கையசைத்து  வழியனுப்ப,
நான் பள்ளி சென்ற காலங்களே…..

நட்பு   என்னும்   ஒற்றைச்சொல்லை,
உலகமாய்  எண்ணி,
நான் அழுது,  சிரித்த  காலங்களே……

கல்லூரிக்குள், கால்  பதித்து ,
புது சிறகு முளைத்த  சிட்டாய்,
நான் சிறகடித்த  காலங்களே…..

யாரை  விட்டது விதி ???
காதல் பாதையின்,
வழியறிந்து,  பின்  வலியறிந்த  காலங்களே……

இப்படியாய்,
கடந்து விட்ட  காலங்களை,
கரைந்து விட்ட  நிஜங்களை,
மீண்டும்  வேண்டுகிறேன்  ஒருமுறை…..

கடந்து போனதில்,
கனவில் நடந்து போயாவது   தெரிந்து கொள்ளலாமென்றுதான்,
“வரமா? இல்லை சாபமா?,  வாழ்க்கை”……….

4 comments: