Monday 14 October 2013

சிமிட்டல்கள்


 


உரையாடல்களினிடையே,
ஒரு நொடி மௌனம்
காதல் உரைத்து விட
உனக்கு நானளிக்கும் 
இடைவேளை..


நமக்கான இடைவெளியினை 
அதிகம் செய்தது
காலமா
அல்ல,
காலம் கடந்த 
என் காதலா?


அலட்சியத்தால் 
உன் கைகள் கோர்க்காமலேயே
அருகிலிருந்து வந்தேன்
அதிர்ந்து போனேன் 
நம் பாதைகள்
மாறியதை அறிந்த பின்னர்


ஆம் !
உதடுகளை ஊமையாக்கியவள் 
நான் தான்,
எப்படியேனும் நீ ,
உண்மை உதிர்த்துவிடுவாய்
என்ற உறுதியினால்


காதலில்லை என்று 
இதயத்தை 
இறுக்கிக் கொண்டவள்,
கனவுகளில் மட்டும் 
கண்ணீருடன் கலங்குவதேனோ?


நீ இல்லாத நான்,
காற்றில்லாக் குழலென்றால்
மிகைதானோ ?
இல்லை
இனிப்பில்லா விருந்தென்றால் 
குறைதானோ?


8 comments: