Sunday 13 October 2013

சிமிட்டல்கள்




நம் இருவருக்கும் நடக்கும்
குஸ்தி போட்டியில்
நீ தோற்று விடுகிறாய்!
சமையல் போட்டியில்,
நான் தோற்று விடுகிறேன்!..
தோற்ப்பது நாமாயினும்,
ஜெயிப்பது மட்டும் காதலாகி விடுகிறது!!
 
 
 
நம் காதல் சேர்ந்திருந்தால்,
நமக்கு குழந்தைகள் பிறந்திருக்கக் கூடும்!
பிரிந்ததினால்,
கவிதைகள் பிறக்கின்றன!!
 
 
 
உன்னை காதல் சொட்ட சொட்ட
பார்த்த கண்களில்
இன்று கண்ணீர் சொட்டுகிறது!
 
 
 
உன் சாயலில் யாரையேனும்
தெருவில் பார்த்துவிட்டால்,
நீயாக இருக்கக் கூடாதா என்று
இதயத் துடிப்பு எகுருகிறது..
நீயில்லை என்று தெரிந்த பின்பு,
மீண்டும் வெறுமனே துடிக்கின்றது!
 
 
 
 
கையில் இருந்த மிட்டாயை தொலைத்த
குழந்தையாய் இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்
நான் செல்லும் சாலைகளில் எல்லாம்.....
உன்னை!

4 comments:

  1. Romba Nalla iruku Pri.... Welcome back after a long time....

    ReplyDelete
  2. romba nalla irukku pri... kannamma eluthunatho nu ninachen. pri nu therinchathum off ayitten. ithu mathiriyana mittay kavithaigalai niraiya ethirparkkiren.

    ReplyDelete
    Replies
    1. Unga kita irunthu comment vanthathe romba santhosam yoki :) Kannamma ezhuthuna alavuku irunthuchunu sonnathu innum santhosam :)

      Delete