Monday 14 October 2013

லஞ்சம்


தாயின் கருவில்
பிறக்கும் சிசுவில்
வளரும் குழந்தை
வளர்ந்த முதியோர்
அனைவரை கொல்லும்
பணத்தின் வண்ணம்
பிறந்திடும் லஞ்சம்

மருத்துவம் என்னும்
மறு உயிர் தந்திடும்
கடவுளின் தொழிலிலும்
தயக்கம் இன்றி
தலைவிர்த்து ஆடும்
இரத்தம் சுண்ட
உறிஞ்சிடும் லஞ்சம்

திருமணம் என்னும்
இரு உயிர் இணைந்திடும்
சொர்கத்து நிகழ்விலும்
பேராசை பொருட்டு
வரன் தட்சனை வேண்டி
இரு மனம் பிரிய
திருமண வைபோகமாய்
உதித்திடும் லஞ்சம்


நிரந்திர அலுவல்
போதிய ஊதியம்
கனவிலும் இன்பம்
அடங்கிய ஒருவன்
அரசாங்க சேவை
செய்திட வேண்டி
ஏழையின் உழைப்பில்
வளர்ந்திடும் லஞ்சம்

அலுவல் புரிய
அவசரம் காட்டி
தாயின் மடியில்
தூக்கம் மறந்து
உழைக்கும் பெண்ணிடம்
கலவியின் பெயரில்
கலந்திடும் லஞ்சம்

ஊரை கொன்று
உறவை கொன்று
உண்மையை கொன்று
உலகையும் கொன்று
வளர்ந்திடும் லஞ்சம்
ஒருநாள்
உன்னையும் கொல்லும்
மறவாதே.............!!!!
                                                                                             

4 comments:

  1. உன்னையும் கொல்லும்
    மறவாதே.............!!!!
    அருமையான வரிகள் நண்பா.

    ReplyDelete
  2. உண்மையான வரிகள் ..

    ஊரை கொன்று
    உறவை கொன்று
    உண்மையை கொன்று
    உலகையும் கொன்று
    வளர்ந்திடும் லஞ்சம்
    ஒருநாள்
    உன்னையும் கொல்லும்
    மறவாதே.............!!!!

    ReplyDelete
  3. arumai:) Kalavi engira thooya thamizh varthai ubayayoga padithiyamaikku nandri!!

    ReplyDelete