Saturday 12 October 2013

நிலவுடன் சில நிமிடங்கள் ..

 

கெஞ்சிக் கெஞ்சி
கொஞ்சல் கதை பேசும்
குளிர் காற்று
நீள நிலப்பரப்பாய்
நெடுந்தூர,
நீலப் புல் விரிப்பாய்
வானம்
சுற்றிச் சூழ்ந்திருக்க
தனிமையில் நான்





தோழனுக்குத் தோழியாய்
காதலனுக்குக் காதலியாய்
கன்னியவள்,
கலைந்த மேகங்கள்
நடுவே
காட்சி தந்து
என்
கண்கள் நிறைத்தாள்





அடடா,
அவளை,
கண்டு மகிழாக்
கண்கள் இல்லை
தன்னை மறவா
நெஞ்சம் இல்லை
கசிந்துருகாக் கவிஞன்
தரணியில்,
இல்லவே இல்லை





ஓயாமல் என்னை
உற்று நோக்குமவள்
ஓரிரு கணங்கள்
மட்டும்
ஓடி ஒளிவது
ஏனோ ?
என்னுடன்
விளையாட விழைகின்றாளா?
இல்லை,
என்னை
விந்தை காண
அழைக்கின்றாளா?





மங்கையவள் மயக்கத்தில்
எந்தன் நிலை
நான் மறந்தேன்
இராகமொன்று
நான் இசைக்க
தாளம் தட்டி
அவள்,
தலை அசைக்க
தரணியில் தனித்திருப்போர்
நாங்களென்ற
நாடகமொன்று அரங்கேறியது





கயவனவன்
கருமேகங்கள் வழி
கழகம் செய்ய
என்னவள்,
எங்கோ பறந்தோடினாள்
என்னைத்
தனிமைச் சிறையில்
தத்தளிக்க விட்டு





ஏக்கம் தாக்கியதால்
விடியலை வெறுத்து
வேற்று வீதிகளில்
உலா வருகிறேன்
அவள் துணை நாடி ..

5 comments:

  1. Semma feel Kannamma.... Oru karpanai ulagathukku ennai kondu serthu manathai karaiya seigirathu intha kavithai....

    ReplyDelete
  2. ஏக்கம் தாக்கியதால்
    விடியலை வெறுத்து
    வேற்று வீதிகளில்
    உலா வருகிறேன்
    அவள் துணை நாடி ..
    alagana varikal

    ReplyDelete
    Replies
    1. nandri mathi vathani avargale

      Delete