Saturday 12 October 2013

என்ன செய்தாய் என்னை??



உன் முகம், மின்னி, மறையும்போதெல்லாம் ,
நான் மூர்ச்சையுற்று போவது, ஏன் ??

நீ  என்னுடன்  இருக்கும்  வேளையில்,
நான் உருகுலைந்து போவது, ஏன் ??

உன் மலர்ச்சிந்தனைகள், என் மனச்சோலையில்,  மலர்கையில்,
ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது, ஏன் ??

உன்னைக்  காணும்போதெல்லாம்,
காற்றினுள்ளும் மூச்சுத் திணறுவது, ஏன் ??

உன் குரல் என் செவி தழுவும்போதெல்லாம்,
உலகிற்கு நான் செவிடாவது, ஏன் ??

உன் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் ,
எனை அறியாமலே, உதடுகள் புன்னகைப்பது, ஏன் ??

உன் வரவின்போதெல்லாம்,
எனக்குள் உண்டாகும் மனநடுக்கம், ஏன் ??

உன் நினைவுகள் தாளாமல்,
நள்ளிரவெல்லாம், நிலவிற்கு துணையிருக்கிறேன்,  ஏன் ??

இப்படி,
வினாக்கள் தான் விரிகின்றன….
விடைகள் இன்னும் விளங்கவேயில்லை…..

பெண்மைக்கான நாணம்,
என்னைக் கொல்லுமுன்,  சொல்லிவிடேன்,
“என்ன செய்தாய் என்னை???”

3 comments:

  1. adada.... kaathal kavithaiyil pugunthu oru kalavarathai undu pannugirathe.....Arumai Arumai.....

    ReplyDelete
  2. arumaiyana padaippu... vazhthukal thozhi

    ReplyDelete