Thursday 28 February 2013

தொடரும் பிரிவின் பயணம்...

































தலையணையில் முகம் புதைத்து அழுதிட தோன்றும் எனக்கு,
உன்னை விட்டு பிரியும் சோகம் தான் காரணம் அதற்கு,
எங்கே நம் உறவு ஆரம்பித்தது என்று சற்றே காலத்தின் பின்னே சென்றேன்,
3
வருடங்களில் எத்தனை மாயம் என் வாழ்வில் என்று நினையும்போதே  வியந்தேன்.

கண்ணீர் துளிகள் மட்டும் மிஞ்சின உன்னுடன் இருந்த காலம் முழுதும்,
கானல் நீராய் சில புன்னகை சிந்தவும் செய்தேன் எனினும்,
பிழை செய்தே விட்டேன் நம் உறவை தொடர்ந்ததால் என்ற நினைவே என்னில்,
ஏமாற்றமும் ஏக்கமும் மாறி மாறி மின்னியது என் சிறு கண்ணில்.

உன்னை பெற தவம் செய்தேனே என்றே அகமகிழ்ந்தேன் ஓர்நாள்,
என்னை வாட்டிய உன்னை துறக்க முடியாமல் மனம் புளுங்கினேன் பலநாள்,
எத்தனை செய்தும் நிரய்படுத்த முடியாத சுற்றம் உன்னுடன் இருக்கையில்,
உன்னுடன் கைகோர்த்து விண்ணை தொடும் அளவில் கனவினை  தொடுத்த நானும் ஒருத்தி முட்டாள்களில்.

விடை பெறும் போதும் கண்ணீர் விடுவேன் என் உதிரம் உறிஞ்சி சக்கையாய் வெளியேறும் என் உடலை எண்ணி,
என்னதான் செய்யவில்லை என்ற கேள்வி, என்ன செய்தாலும்  தேவையில்லை உன் சேவை என்ற உன் வார்த்தை வேள்வி,
நாட்களில் போகிறது உன்னுடனான சொந்தம்,நடைபாதையில் நிற்கிறது என் வாழ்க்கையின் லட்சியம்,
உன்னுடனான கடைசி நாள் பயணம்,சுகமோ சுமையோ தெரியாது ஆனால், அது என் கனவின் இறுதி யாத்திரை.

                                                   - சிந்துஜா

2 comments: