Tuesday 19 February 2013

சிதறச் செய்த நின் சிரிப்பு















என்ன கண்டாய்
என் கண்களில்
எதற்குச் சிரித்தாய்
உன் கண்களில்

கண்களில் வழிந்த
காதலதை
கண்ணிமை கொண்டு
திரையிட்டல்லவா வைத்திருந்தேன்

திரை விலக்கும் திருடனாகி
எங்கு கொண்டு சென்றாய்
என் இதயத்தை ?

காதலின்,கள்ளத்தனத்தின்
பூரணம்
புன்னகையென்று
புரிய வைத்த நிமிடம்
நின்ன தன்றோ !

உன் புன்னகை
ஊட்டிய
புது ஸ்பரிசம்
பூவுலகம் எனக்களித்ததில்லை
இந்நாள் மட்டும்

ஊனும்,உள்ளமும்
ஒரு சேரப்
புனிதமடைந்தவளாய்
உணர்ந்தேன்,
நீ
புன்னகை பூண்ட
வேளைகளில்

நீ சிரித்ததால்
சிதறிய இதயத்தை
சிரித்துக் கொண்டே
சேகரிக்கின்றேன்
சிதறல்களும்
உன் பிம்பம்
காண்பித்ததால்

என்னை
முழுமையடையச் செய்த
முதற் புன்னகையில்
மலர்ந்த மொட்டுகளாய்
மீண்டும் மீண்டும்
மலர விழைகிறேன்
மலர்ச்சி உனக்கானதென்பதால் !

                                                         - கண்ணம்மா

4 comments:

  1. காதலை உணரும் தருணங்களை அச்சு அசலாக கண்முன் நிறுத்துகிறது இந்த கவிதை...

    ReplyDelete
  2. oru pen kaathalithalin arikurigalai adukivitirgal kannamma.....

    ReplyDelete
  3. ஊனும்,உள்ளமும்
    ஒரு சேரப்
    புனிதமடைந்தவளாய்
    உணர்ந்தேன்,
    நீ
    புன்னகை பூண்ட
    வேளைகளில்

    arumaiyana varigal kannamma...

    ReplyDelete
  4. நீ சிரித்ததால்
    சிதறிய இதயத்தை
    சிரித்துக் கொண்டே
    சேகரிக்கின்றேன்
    சிதறல்களும்
    உன் பிம்பம்
    காண்பித்ததால் mikavum piditha varikal......

    ReplyDelete