Monday 1 April 2013

சிமிட்டல்கள்
























பொய்க் கோபம்!

இப்போதெல்லாம் அதிகம் கோபம் கொள்ள
பழக்கிவிட்டாய்,
நீ சமாதானம் செய்வதை எதிர் பார்த்துப் பார்த்து…!
நண்பனிடமும் கோபம் கொண்டு என்ன செய்ய?



வாழ்கைப் பக்கங்கள்…

நீயே நிரம்பி வழிகிறாய்,
என் டைரியின் பக்கங்களிலும்,
நெஞ்சத்து நினைவுகளிலும்..!



உதிராப் பூ!

உன் பார்வை பூக்கள் எனக்காகவே பூத்தன,
நான் பறிக்காமல் போகலாம், ஆனால்..
வேறொருவர் மீது வீசி விடாதே!



கேள்வி

என் இரு கை சேர்த்து வினவி பார்க்கிறேன்,
ஏன் அது தர மறுக்கிறது?
நம் கை கோர்த்திருக்கும் போது ஏற்பட்ட மாற்றத்தினை!



பிடித்தது… எது?

பைத்தியம் பிடித்தது,
கவிதை எழுதினேன்..!
பைத்தியம் பிடித்ததால் அல்ல,
உன்னை பிடித்ததால்…!



கனவின் நினைவு..

கெஞ்சுவதும் கொஞ்சுவதும் நீயாகி இருந்தால்,
மிஞ்சுவதும் மிதப்பதும் நானாகி இருப்பேன்..
கவிதையும் பாடலும் உன் வசம் என்றால்,
வரிகளும் குரல் தேடி என் புகல் சேரும்..
பயணமும் பிரார்த்தனையும் உன் விருப்பமானால்,
என் விரலும் விரதமும் உனக்காய் இருக்கும்..
நினைவுகளும் கற்பனைகளுமே நீயாகி போனதால்,
கண் திறந்தே கண்ட கனவு காற்றோடு கலைந்தது!!!



நாம்!

என்னை வாசிக்க நீ,
உன்னை நேசிக்க நான்,
நமக்குள் நாம்!


பிரியங்கா

4 comments:

  1. காதல் துளிகள்.... மிகவும் கவர்ந்தது தோழி....

    ReplyDelete
  2. உங்களின் உதிராப்பூவும் கேள்வியும் மிக அருமை...

    ReplyDelete
  3. naan rasitha varigal pri ..

    கெஞ்சுவதும் கொஞ்சுவதும் நீயாகி இருந்தால்,
    மிஞ்சுவதும் மிதப்பதும் நானாகி இருப்பேன்..
    கவிதையும் பாடலும் உன் வசம் என்றால்,
    வரிகளும் குரல் தேடி என் புகல் சேரும்..
    பயணமும் பிரார்த்தனையும் உன் விருப்பமானால்,
    என் விரலும் விரதமும் உனக்காய் இருக்கும்..
    நினைவுகளும் கற்பனைகளுமே நீயாகி போனதால்,
    கண் திறந்தே கண்ட கனவு காற்றோடு கலைந்தது!!!

    ReplyDelete