Thursday 18 April 2013

அடைமழைக்கு…





தாய் மடியில்
தந்தை தோள்களில்
தமையன் பாதையன்றி
பிரிதொரு புவனமில்லை
என்றிருந்த எனக்கும்
புதிய ஆதியாய் அடைமழை...

மேதினி மேவும்
மேன்மை காணும் துளிகளில்
பொறாமைகள் கண்டதில்லை
போட்டிக்கும் குறைவில்லை 
பார்த்து  பழகியதில்லை
பாராட்டுக்கும் பஞ்சமில்லை..

மொழியின் இனிமையும்
எழுத்தின் பெருமையும்
சொல்லின் அழகையும்
கற்கும் களமாய்
வியக்கிறேன் இவ்விதழை...

விண்ணில் உடுக்களாய்
மண்ணில் மருதமாய்
வனத்தில் மலர்களாய்
என்றும் செழித்திருக்க
என் கை எழுதும்
என் தமிழ் வளர....


சித்ரா

3 comments:

  1. பொறாமைகள் கண்டதில்லை
    போட்டிக்கும் குறைவில்லை
    பார்த்து பழகியதில்லை
    பாராட்டுக்கும் பஞ்சமில்லை..

    enna solla asathal ponga chitra

    ReplyDelete
  2. மொழியின் இனிமையும்
    எழுத்தின் பெருமையும்
    சொல்லின் அழகையும்
    கற்கும் களமாய்
    வியக்கிறேன் இவ்விதழை

    Unmayaana varikal.......

    ReplyDelete
  3. எல்லார்க்கும் நன்மை நினைக்கும் அடைமழைக்கு முதல் துளி உங்கள் வரி, சித்ரா...

    ReplyDelete