Monday 1 April 2013

குறள் மழை - 5


திருவள்ளுவரின் அடுத்த அதிகாரம், இல்வாழ்க்கை. இது  இல்லறவியலில் அடங்குகிறது. இது திருக்குறளின் 5-வது அதிகாரமாகவும் இல்லறவியலின் முதல் அதிகாரமாகவும் திகழ்கிறது. இதனை இப்போது ருசிப்போமா? ஆயிரம் உறவுகள் கிடைப்பினும் ஒரு மனிதனின் வாழ்வு முழுமை பெறுவது அவன் இல்லறத்தில் தான். இல்வாழ்க்கையை சுபமாக அமைப்பதெப்படி? இதோ வள்ளுவனே கூறுகிறான் கேளுங்களேன்.

'
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

மங்கையை மணந்தான்,
மாசிலா பெற்றோரையும்
மதிப்பில்லா பிள்ளையையும்
மறியாதைத் தவறா உறவுகளையும்
பேணிக் காப்பான்!



துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

பெண்ணின் கரம் பிடித்து 
அவளின் மனம் பறித்தவன் என்பவன்....
துறவு கொள்ளும் துறவியர்
இறவு கொள்ளும் இல்லாதவர்
இறப்பின் மடியில் உறங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும்
உதவும் பொருட்டு
இப்பூவுலகில் பிறந்த நல்லவன்....



தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

கணவன் என்பவன் 
கீழ்வரும் ஐவரை ஓம்பி ஒழுக வேண்டும்!
அவர்கள்....
இறப்பைத் தழுவியோர்
மேல் உலகின் தேவர்
வாசல் தேடி வரும் விருந்தினர் 
நம் நலம் நாடும் சுற்றத்தார்
கணவன் ஆகிய தான்!!




பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பழி ஒன்றும் பட்டுவிடுமோ என 
பற்றற்று பொருள் சேர்த்து
பரந்த மனத்துடன் 
பலருக்கும் பகிர்ந்தளிப்பான் பரம்பரை
என்றும் அழியா!
அறிவோம் இதை அவன் வழியாய்!



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


பெற்றப் பிள்ளை மீது அன்பு
மற்ற உற்றார் இடத்து அறன்
இவ்விரண்டும் பேணி இல்லறம் நடத்தும்
இவன்
 வாழ்வின் பண்பும் பயனும் அதுவே!
காணலாம் இந்தப் படைப்பை பேருந்துகளில்
எனினும் இதுவும் ஒன்று நம் மனதில் புணைய வேண்டிய பெரிய உந்துகளில்




அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப்
 பெறுவ எவன்.

பிழையாமல்
பிறரை பிழைக்காமல்
அற வழியில்
அன்போடு இல்லறம் நடுத்துபவன்

இல்வாழ்க்கையைத் தவிற பிற இன்பங்களைத் தேடுதல் அரிது!


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை. 


இறைவனை நாடி 
அவனிடத்து சேரும் வழிகளுள் 
தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்க்கெல்லாம் முதலானவன்!
கணவன் என்னும் கொள்கை பிழைக்காமல் பிழைப்பவன்!!


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 

நோற்பாரின் நோன்மை உடைத்து. 


முற்றிலும் பற்றற்று 
எல்லாவற்றையும் துறந்த 
துறவப் பொறுமையின் தலைகனமும் குறைந்திற்று 
இல்லறம் புகுந்து 
ல்லறம் புணர்ந்து
சொல்லும் வண்ணம் வாழும் 
கணவன் இவன் தன் வாழ்க்கையைக் கண்டு


அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

இல்ல அறத்தில் இல்லை துறம் 
துறவும் பிழையுமானால் அதில் எங்கே அறம் !
எனவே தான் 
இல்லற அறம் துறவைக் காட்டிலும் ஓங்கி நிற்கிறது!



வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் 
தெய்வத்துள் வைக்கப் படும். 


கீழ் உலக இல்லத்தில் 
அறம் பூண்டு வாழும் இவன்
மேல் உலகின் 
தேவர்களுள் ஒன்ரெனக் கருதப்படுவான்!

ஜெய கீதா

4 comments:

  1. நல்ல கணவனாக எப்படியிருக்க வேண்டும் என தெரிந்துக்கொண்டேன், சிறப்பாக இருந்தது உங்கள் விளக்கவுரை.....

    ReplyDelete
  2. JG,


    எங்கோ ஒரு இடத்தில் மனைவி என்று வரவேண்டும்....நான் கூறியது சரியோ?

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

    கணவன் என்பவன்
    கீழ்வரும் ஐவரை ஓம்பி ஒழுக வேண்டும்!
    அவர்கள்....
    இறப்பைத் தழுவியோர்
    மேல் உலகின் தேவர்
    வாசல் தேடி வரும் விருந்தினர்
    நம் நலம் நாடும் சுற்றத்தார்
    கணவன் ஆகிய தான்!!

    ReplyDelete
  3. Nalla vilakkam..........

    அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

    இல்ல அறத்தில் இல்லை துறம்
    துறவும் பிழையுமானால் அதில் எங்கே அறம் !
    எனவே தான்
    இல்லற அறம் துறவைக் காட்டிலும் ஓங்கி நிற்கிறது!

    ReplyDelete
  4. ஓம்பி ஒழுக வேண்டிய ஐவருள் மனைவி இல்லாதது குறைதான்..

    ReplyDelete